தமிழ் முஸ்லிம்கள் தொழுத இடத்தை உருது முஸ்லிம்கள் கழுவிவிடும் தீண்டாமை கொடுமை! நடப்பது சென்னை ஆயிரம்விளக்கு மசூதியில்; போராளிகள் கிடப்பது எங்கே?
தமிழ் முஸ்லிம்கள் தொழுத இடத்தை உருது முஸ்லிம்கள் கழுவிவிடும் தீண்டாமை கொடுமை! நடப்பது சென்னை ஆயிரம்விளக்கு மசூதியில்; போராளிகள் கிடப்பது எங்கே?
இந்துக்களிடையே தீண்டாமை கொடுமை உள்ளதால் தலித்துக்கள் முஸ்லிம்களாக மதம் மாறுகின்றனர் என்று வெட்கமே இல்லாமல் உண்மைக்குப் புறம்பாக மேடைதோறும் முழங்கி வருகிறார் திருமாவளவன். இவரைப் போன்றே கி வீரமணி, மு.க.ஸ்டாலின், வைகோ, முத்தரசன் போன்றவர்களும் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
மேலும் இந்து ஆதிதிராவிடர்கள், கிறிஸ்தவர்களாகவும், முஸ்லிமாகவும், மதம் மாறுவதை இந்த தலைவர்கள் ஊக்கப்படுத்தி வருகின்றனர். அதற்கு அவர்கள் சொல்கின்ற ஒரே காரணம், இந்து மதத்தில் ஜாதி ஏற்றத்தாழ்வு உள்ளது. கிறிஸ்தவ மதத்திலும், முஸ்லிம் மதத்திலும் சாதி ஏற்றத் தாழ்வு கிடையாது. அங்கு பாகுபாடற்ற சமத்துவம் நிலவுகிறது. ஆகவேதான் அவர்கள் மதம் மாறுகிறார்கள், என்று வியாக்கியானம் பேசி வருகின்றனர்.
ஆனால் உண்மை நிலைமை வேறாக உள்ளது. திருச்சி திருநெல்வேலி போன்ற இடங்களில் தலித் கிறிஸ்தவர்களுக்கு கல்லறைத் தோட்டத்தில்கூட சமத்துவம் கொடுக்கப்படவில்லை. அவர்களுக்கு என்று தனியாக பிரத்தியேக கல்லறைத் தோட்டங்கள்தான் உள்ளன.
கிறிஸ்தவ மதத்தில் இப்படி என்றால், முஸ்லிம் மதத்தில் ஒரு படி மேலே போய், தமிழ் முஸ்லிம்கள் தொழுகை நடத்திய இடத்தை உருது முஸ்லிம்கள், தண்ணீர் விட்டு கழுவி விடும் கொடுமை இன்றளவும் நடந்து வருகிறது. குறிப்பாக சென்னையில் ஐஸ்ஹவுஸ் பகுதியில் இப்போதும் இது நடந்து வருகின்றது.
முஸ்லிம்களிடம் உள்ள இந்த தீண்டாமை கொடுமை தொடர்பாக, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவராக இருந்த பி.ஜெ. என்ற பி.ஜெய்னுல் ஆபிதீனிடம், சென்னை ஐஸ்ஹவுசை சேர்ந்த அமிஷா பானு கேள்வி எழுப்பினார். அப்போது அவர் கூறியதாவது:-
என்னுடைய பெயர் அமிஷா பானு. ஐஸ் ஹவுஸில் இருந்து வருகிறேன். உருது முஸ்லிம்கள், தமிழ் முஸ்லிம்களை மிகவும் கேவலமாக நினைக்கிறார்கள். தமிழ் பேசுகிறவர்கள் முஸ்லிமே கிடையாது என்று சொல்கிறார்கள். அவர்கள்தான் ரசூல்லாவுடைய வாரிசுகளாம். தமிழ் பேசுகிற முஸ்லிம்கள் எல்லாம் கிடையாதாம்.