#KathirExclusive "உண்மைக்கு புறம்பான, பிரிட்டிஷ் காலனியத்தின் அடிமைத்தனமே #கொளஞ்சி திரைப்பட முன்னோட்ட காட்சிகள்" - கொந்தளிக்கும் வானதி சீனிவாசன்!
#KathirExclusive "உண்மைக்கு புறம்பான, பிரிட்டிஷ் காலனியத்தின் அடிமைத்தனமே #கொளஞ்சி திரைப்பட முன்னோட்ட காட்சிகள்" - கொந்தளிக்கும் வானதி சீனிவாசன்!
கொளஞ்சி திரைப்படத்தின் முன்னோட்ட காட்சியில் சமுத்திரக்கனி சமூகநீதி என்ற பெயரில் பேசும் வசனம் தற்போது வைரல். அந்த வசனங்களுக்கு ஆதரவும், எதிர்வினையும் குவிந்து வரும் நிலையில் இந்த வசனம் குறித்து பா.ஜ.க தமிழக பொதுச்செயலாளர் வானதி சீனிவாசனின் கருத்துக்களை கதிர் குழு பேட்டியெடுத்தது. அந்த முழு பேட்டி பின்வருமாறு:
நாளை வெளியாகவுள்ள ஒரு திரைப்படத்தின் முன்னோட்ட காட்சியில் கோவில்களில் உள்ள தெய்வங்கள் வடக்கிருந்து வந்தவர்கள் என்ற ஒரு வசனம் இடம்பெற்றுள்ளது. ஹிந்து தெய்வங்கள் வடக்கிருந்து வந்தவர்களா?
நாளை வெளியாகவுள்ள ஒரு திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சியில் சமூக சீர்திருத்தவாதியாக நடிக்கும் ஒரு நடிகர் "கோவில்களில் இருக்கும் சாமிகள் வடக்கில் இருந்து வந்தவை" என்றும் இங்கு இருந்த சாமிகள் ஊருக்கு வெளியில் கொண்டு வைத்து விட்டார்கள் என்றும் கூறுகிறார். அத்துடன் இங்கு கோவில் கருவறைகளுக்குள் பிராமணர்கள் மட்டுமே போக முடியும் என்றும் கூறுகிறார். இவை அனைத்துமே அப்பட்டமான பொய்கள்.
இன்றைய மானுடவியல் ஆராய்ச்சியாளர்கள் தூக்கி வீசப்பட்ட காலனிய கால கருத்துகளை எடுத்து வைத்துக் கொண்டு இன்றைக்கு திரைப்படங்களை எடுப்பது இந்திய அரசியல் நிர்ணய சட்டம் பேசும் அறிவியல் மனப்பான்மைக்கு எதிரானது.
இவை காலனிய காலத்து கருத்துக்கள் என்று எப்படி கூறுகிறீர்கள்?
காலனிய காலத்தில் தான் வடக்கிலிருந்து வந்த தெய்வங்கள் என்றும் தமிழ்நாட்டின் தெய்வங்கள் என்றும் பிரித்து பேசப்பட்டன. அதற்கு இந்தியர்களை பிரித்தாளும் தேவை ஒரு காரணமாக இருந்தது. ஆனால் அப்போதே தமிழறிஞர்கள் இதனை எதிர்த்திருக்கிறார்கள். மகாகவி பாரதி, பேரா.மு.சண்முகம் பிள்ளை என பல தமிழ் அறிஞர்கள் அப்போதே இதை கண்டித்திருக்கிறார்கள். தமிழ்நாட்டின் தலை சிறந்த தனிப்பெரும் காப்பியமான சிலப்பதிகாரம் தந்த இளங்கோ அடிகள் ராமனையும் கண்ணனையும் பாடாத நாவென்ன நாவு அவர்களின் அழகைப் பார்க்காத கண்கள் என்ன கண்கள் என பாடியிருக்கிறார், அவர் உடையிலும் பாடலிலும் அழுக்கு இருக்கிறதென கூறுகிறாரா இந்த திரைப்பட இயக்குநர்?