கொரோனா பாதிக்கப்படவருடன் தொடர்பு : விஜயகுமார், ஐ.பி.எஸ். தீவிர கண்காணிப்பில்..

கொரோனா பாதிக்கப்படவருடன் தொடர்பு : விஜயகுமார், ஐ.பி.எஸ். தீவிர கண்காணிப்பில்..

Update: 2020-04-05 07:39 GMT

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பாராட்டுக்குரிய மூத்த போலீஸ் அதிகாரியாக தமிழகத்தில் பணியாற்றியவர் விஜயகுமார் ஐ.பி.எஸ். பின்னர் இவரது திறமையால் மத்திய பிரிவில் சிறப்பு நிலை அதிகாரியாக உயர்ந்தார். பல்வேறு சவால் மிகுந்த இடங்களில் சிறப்பாக பணியாற்றிய இவர் காஷ்மீரிலும் இன்ஸ்பெக்டர் ஆப் ஜெனரலாக பணியாற்றினார். இப்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், கொரோனா பாதிக்கப்பட்ட சி.ஆர்.பி.எஃப் மருத்துவருடன் விஜயகுமார் தொடர்பில் இருந்ததாக தகவல் வெளியானது. இந்த நிலையில்,முன்னெச்சரிக்கையாக தாமாகவே தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளார்.

https://hindi.asianetnews.com/madhya-pradesh/coronavirus-positive-ias-officer-j-vijay-kumar-in-mp-bhopal-corona-infected-kpr-q892y8  

Similar News