"யாருக்கு வாக்களித்தோம்?" - அறிந்து கொள்ளும் VVPAT கருவியை இயக்குவது குறித்து தேர்தல் அலுவலர்களுக்கு சிறப்பு பயிற்சி

"யாருக்கு வாக்களித்தோம்?" - அறிந்து கொள்ளும் VVPAT கருவியை இயக்குவது குறித்து தேர்தல் அலுவலர்களுக்கு சிறப்பு பயிற்சி

Update: 2019-02-09 01:51 GMT

வாக்காளர்கள் அளிக்கும் வாக்கு தாங்கள் விரும்பிய சின்னத்துக்குதான் சென்று சேர்ந்தது என்பதை உறுதிப்படுத்தும் வசதி வாக்குப் பதிவு இயந்திரங்களில் பொருத்தப் பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு அக்கருவி புதிதாக அறிமுகப்படுத்துகிறது. இதை அடுத்து "விவிபேட்" எனப்படும் இக் கருவியை இயக்குவது குறித்து அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.


முதன் முதலாக நாகை மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற பயிற்சியில் விவிபேட் கருவியை எப்படி இயக்குவது குறித்த விளக்கி காண்பிக்கபட்டது. இதில் மாவட்டத்தின் பல்வேறு அரசு அதிகாரிகளும், வாக்கு மையங்களில் பணியாற்ற கூடிய அதிகாரிகளும் கலந்துகொண்டனர். அப்போது ஒருவர் வாக்களித்தால் அந்த வாக்காளர் யாருக்கு வாக்களித்தார் என்பதை 7 வினாடிகளில்  திரையில் பார்த்து தெரிந்துகொள்ளலாம் உட்பட பல தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.


மேலும், கருவியை அனைத்து அதிகாரிகளும் முறைப்படி சரியான வகையில் பயன்படுத்த வேண்டும் என்றும் ஆட்சியர் சுரேஷ் குமார் கேட்டுக்கொண்டார். இதே போன்று நெல்லையில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்ளும் ஒப்புகைசீட்டு எந்திரம் பயன்படுத்தப்படுவது குறித்த பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.


இதில் வட்டாட்சியர்கள் , துணை வட்டாட்சியர்கள் , வருவாய்த்துறை அலுவலர்கள் , உள்ளாட்சிதுறை அலுவலர்கள் , மாவட்ட ஊரக முகமைத் திட்ட அலுவக ஊழியர்கள் என 200 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதே போன்ற பயிற்சி அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தேர்தல் ஆணைய அதிகாரிகளால் விரைவில் நடத்தப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Similar News