கோர விபத்துக்குள்ளான ஒடிசா ரயில் டிரைவர்களின் நிலை என்ன ஆனது?

படு பயங்கரமான கோர விபத்துக்கு உள்ளான ஒடிசா ரயில் விபத்தில் டிரைவர்களை நிலை என்ன ஆனது என்ற கேள்வி எழுந்துள்ளது?

Update: 2023-06-04 18:00 GMT

ஷாலிமார் - சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ்,  ரயில் பெங்களூரு - ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் ஒரு சரக்கு ரயில் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட விபத்தில் டிரைவர்கள் நிலை என்ன ஆனது என்ற கேள்வி எழுந்தது ? அதற்கு பதில் கிடைத்துள்ளது. சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் பெங்களூரு ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் டிரைவர்களும் கார்டுகளும் படுகாயங்களுடன் உயிர்த்தப்பினர்.


அவர்கள் தற்போது இரு வெவ்வேறு ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். இதை தென்கிழக்கு ரயில்வே காரக்பூர் வணிக பிரிவு மூத்த மேலாளர் ராஜேஷ்குமார் தெரிவித்தார். அதே நேரத்தில் சரக்கு ரயில் டிரைவரும் கார்டும் எந்தவித காயமும் இன்றி தப்பித்தனர்.

Similar News