நித்யானந்தாவை ஒழித்துக்கட்ட கிறிஸ்தவ மிஷனரிகள் ஏன் வெறிபிடித்து அலைகின்றன? - வைரலானது வீடியோ ஆதாரம்!

நித்யானந்தாவை ஒழித்துக்கட்ட கிறிஸ்தவ மிஷனரிகள் ஏன் வெறிபிடித்து அலைகின்றன? - வைரலானது வீடியோ ஆதாரம்!

Update: 2019-12-11 05:31 GMT


பொதுவாக இந்து சாமியார்களும், சந்நியாசிகளும், மடாதிபதிகளும் இந்து மதத்தில் உள்ள தத்துவங்கள், சித்தாந்தங்கள், பழக்கவழக்கங்கள் போன்றவற்றை மட்டுமே மக்களுக்கு எடுத்துச் சொல்லி வந்துள்ளனர்.


ஆனால் விதிவிலக்காக நித்தியானந்தா போன்ற ஒரு சிலர் மட்டும் கிறிஸ்தவ மிஷனரிகளின் மதமாற்ற முகத்திரையை கிழித்து எறிந்து உள்ளனர்.


ஆகவேதான் நித்யானந்தா மீது அவ்வப்போது ஏதாவது ஒரு அவதூறு பரப்பி, அவரை ஒரு உலகமகா அயோக்கியன் போல் சித்தரித்து வருகின்றன. இது கிறிஸ்தவ மிஷினரிகளின் திட்டமிட்ட செயலாக தொடர்ந்து வருகிறது. நித்தியானந்தாவிற்கு மட்டுமல்ல, கிறிஸ்தவ மிஷனரிகளின் மதமாற்றும் அயோக்கியத்தனத்தை யாரெல்லாம் வெளிப்படுத்தினார்களோ, அவர்களுக்கெல்லாம் இது போன்ற நெருக்கடிகள் வருவது தொடர் கதை.


நித்யானந்தா தவறு செய்தாரா? இல்லையா? அது எத்தகைய தவறு? என்பது ஒருபுறம் இருக்கட்டும்.  ஆனால் கேரளாவைச் சேர்ந்த கற்பழிப்பு புகழ் கிறிஸ்தவ பேராயர் பிரான்கோ முலக்கல்லைவிட மோசமானவர் அல்ல நித்தியானந்தா.





பிராங்கோ முலக்கல், 2014 முதல் 2016-ஆம் ஆண்டு வரை அவருடன் பணியாற்றி வந்த கன்னியாஸ்திரிகளை 13 முறை கற்பழித்துள்ளார். இது வெளியே தெரிந்த தகவல். இந்த கற்பழிப்பு சம்பவம் தொடர்பாக சாட்சி சொன்ன பாதிரியார் குரியகோஸ் கட்டுதாரா கொலை செய்யப்பட்டார். கற்பழிக்கப்பட்ட கன்னியாஸ்திரிகள் சபையில் இருந்து நீக்கப்பட்டனர். வாடிகன்கூட கற்பழிக்கப்பட்ட கன்னியாஸ்திரிகளுக்கு கருணை காட்டவில்லை. ஆனால் கற்பழித்த பேராயர் பிராங்கோ முலைகளுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தது. 



கேரள கம்யூனிஸ்ட் முதல்வர் பிணராயி விஜயன், கற்பழிப்பு மற்றும் கொலையாளி பிராங்கோவை நேரில் சென்று வரவேற்ற அசிங்கமும் அரங்கேறின. அது அவரது கிறிஸ்தவ மதப்பற்றை பறை சாற்றியது. கேரள மக்கள் மிகப்பெரிய சாதனை படைத்தவரைப் போன்று பிராங்கோவை கொண்டாடுகின்றனர். 
பிராங்கோ கற்பழித்துள்ளார், கொலை செய்துள்ளார். ஆனாலும்கூட கிறிஸ்தவர் என்பதால் தியாகி ஆக்கப்பட்டு உள்ளார். ஆனால் நித்யானந்தா கொலை செய்யவில்லை கற்பழித்ததாக இதுவரை நிரூபிக்கவில்லை இருந்தாலும் அவர் மிகப்பெரிய குற்றவாளியாக சித்தரிக்கப்படுகிறார்
நித்யானந்தா, மதுரை ஆதீனத்தின் இளைய மடாதிபதியாக சில ஆண்டுகளுக்கு முன்பு நியமிக்கப்பட்டார்.


இதில் கிறிஸ்தவர்களுக்கு என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. ஆனால் விஷனரி கும்பல்கள் அனைத்தும் அவருக்கு எதிராக வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் இறங்கி அவதூறுகளைப் பரப்பின. முடிவில் அவரை மதுரையிலிருந்து துரத்திவிட்டார்கள். ஏன் இந்த வன்மம்? எதற்காக கிறிஸ்தவ மிஷனரிகள் நித்யானந்தா மீது திட்டமிட்டு தொடர்ந்து அவதூறுகளை பரப்பி வருகின்றன?


இதற்கெல்லாம் ஒரே காரணம், அவர் கிறிஸ்தவ மதம் மாற்ற மிஷனரிகளின் முகத்திரையை கிழித்து எறிந்ததுதான். இது தொடர்பாக நித்யானந்தா பேசிய வீடியோ ஒன்று இப்போது வைரலாகி வருகிறது.


அந்த வீடியோவில் நித்யானந்தா கூறியிருப்பதாவது;-


நமது சாஸ்திரங்கள், ஆகமங்கள் இந்த சக்திகளை மட்டும் நமது வாழ்க்கையில் வெளிப்படுத்தி காட்டினோம் என்றால், யாராவது இந்து மதத்திலிருந்து வேறு மதத்திற்கு மதம் மாறுவார்கள் என்று நினைக்கிறீர்களா?


இப்போதுகூட யாருமே சாஸ்திர, சக்தியினால் அவர்களது மதத்திற்கு மதம் மாறிவிடவில்லை. வயிற்றுக்கு இல்லாதவர்களை பிடித்து மதம் மாற்றுகிறார்கள்.


யாருமே கிறிஸ்தவத்திற்கு போகவில்லை. வயிற்றுக்காக போகிறார்கள். சாப்பாட்டிற்காக போகிறார்கள். வெளிநாட்டில் இருந்து பணத்தை கொண்டு வந்து வெள்ளைத்தோல் இருக்கின்ற ஆண்களையும், பெண்களையும் இங்கே கொண்டுவந்து படித்தவர்களை அழைத்து வந்து இங்கே இல்லாத ஆட்டம் எல்லாம் போட்டு, இங்கு இருக்கின்ற ஏழை மக்களை, வயிற்றுக்கு இல்லாதவர்களை ஏமாற்றி மதம் மாற்றுகிறீர்கள்.


ஆனால் எங்கள் சாமி அப்படியல்ல. வெளிநாட்டில் படித்தவர்கள் எல்லாம் இங்கே வந்து, அவர்கள் பணம் கொடுத்து இந்துவாக மதம் மாறி வருகிறார்கள். சுற்றி பாருங்கள். எத்தனை நாட்டவர்கள் இந்து மதத்தின் ருத்ராட்சமும், திருநீறும் அணிந்து சிவ பூஜை செய்கிறார்கள் என்று.


இவ்வாறு நித்யானந்தா அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.



Similar News