"திரௌபதி" படத்திற்கு எதற்கு தடை வேண்டும்? காரணம் இதுவா?
"திரௌபதி" படத்திற்கு எதற்கு தடை வேண்டும்? காரணம் இதுவா?
அண்மையில் "திரௌபதி" படத்தின் ட்ரைலர் இணையத்தில் வெளிவந்தது. அந்த படத்தின் ட்ரைலர் மிகபெரிய அளவில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ட்ரைலரில் குறிப்பிட்ட கதை அம்சம் என்னவென்றால் சாதி மற்றும் அரசியல் தலைவரை பற்றி விமர்சனம் செய்யும் வகையில் இருக்கிறது என சமூக வலைத்தளத்தில் இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த தருணத்தில் தற்போது இப்படம் வெளிவர கூடாது மற்றும் வெளிவர அனுமதிக்க கூடாது எனவும் காவல் துறை ஆணையரிடம் பெரியார் திராவிட கழகம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் காவல்துறை இந்த மனுவை எப்பிடி நடவடிக்கை எடுக்கும் என பொறுத்திருந்து பார்ப்போம்.
மேலும் இந்த ட்ரைலரை பற்றி கமெண்ட் பாக்ஸில் 22ஆயிருக்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளன. பெரும் அளவில் படத்திற்கு ஆதரவாக கமெண்ட் செய்துள்ளனர்.