நான் திரும்பி வருவேன் ..உங்களைத் திருப்பிப் போடுவேன்!! சட்டசபையில் தேவேந்திர பட்னாவிஸ் ஆவேசப் பேச்சு!

நான் திரும்பி வருவேன் ..உங்களைத் திருப்பிப் போடுவேன்!! சட்டசபையில் தேவேந்திர பட்னாவிஸ் ஆவேசப் பேச்சு!

Update: 2019-12-02 04:26 GMT

சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நேற்று ஆவேசமாக பேசினார். அப்போது அவர் ‘நான் மீண்டும் முதல்வராக வருவேன்’ என்பதை கடல் அலைகளுடன் ஒப்பிட்டு ஆவேசத்துடன் பேசி னார்.


சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்ட தேவேந்திர பட்னாவிஸ் முதல்வர் உட்பட அனைவரும் வாழ்த்தி பேசினார்கள். அப்போது, முதல்வர் உத்தவ் தாக்கரே, மூத்த அமைச்சர் ஜெயந்த் பாட்டீல் ஆகியோர் மீண்டும் முதல்வராக வருவேன் என்று கூறியவர் இப்போது எதிர்க்கட்சி வரிசையில் உட்கார்ந்திருக்கிறார் என்று தேவேந்திர பட்னாவிசை கிண்டலடிக்கும் வகையில் பேசினர். அவர்களுக்கு நன்றி தெரிவித்த தேவேந்திர பட்னாவிஸ் வழக்கத்தை விட ஆவேசமாக பேசினார். அப்போது அவர் “நான் மீண்டும் முதல்வராக வருவேன் என்று கூறியது உண்மைதான். ஆனால், எப்போது வருவேன் என்று கூறவில்லை. ஆனால் நிச்சயமாக வருவேன்.


நான் கடலைப் போன்றவன். கடலோரம் தண்ணீர் வற்றி விட்டது என்பதற்காக அங்கு நீங்கள் வீடு கட்டி நிரந்தரமாக குடியேறி விடமுடியாது. கடலைப் போன்ற நான் என் இடத்துக்கு மீண்டும் நிச்சயமாக திரும்பி வருவேன்” என்று ஆவேசமாகக் கூறினார்.


மேலும் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு மக்களின் ஆசைகளை நிறைவேற்றும் அரசாக செயல்பட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். மக்கள் நலனுக்காக இந்த அரசு எந்த நடவடிக்கை எடுத்தாலும் பா.ஜ.க அதற்கு ஒத்துழைப்பு அளிக்கும் என்றார் பட்னாவிஸ்.


https://www.financialexpress.com/india-news/will-come-back-says-devendra-fadnavis-after-uddhav-thackerays-jibe-in-war-of-raillery-between-treasury-opposition-in-assembly/1781094/


Similar News