யுவராஜ் சிங் - ஹர்பஜன் சிங் கொரோனா நிவாரண நிதி உதவி!
யுவராஜ் சிங் - ஹர்பஜன் சிங் கொரோனா நிவாரண நிதி உதவி!
உலகை அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ். இதனால் இதுவரை 12 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 69ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதனால் இந்தியாவில் 4ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 102 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் பிரதமர் மோடி அவர்கள் மக்களிடம் தங்களால் முடிந்த நிவாரண நிதியை வழங்கலாம் என அறிவித்திருந்தார். இதற்கு நடிகர்கள் பிரபலங்கள் முக்கிய நிறுவனங்கள் உள்பட பலரும் பிரதமரின் நிவாரண நிதிக்கு தங்களால் முடிந்த நிதியை வழங்கி வருகிறார்கள்.
தற்போது இந்த வரிசையில் இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் மற்றும் சுழல் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் இருவரும் நிவாரண நிதி வழங்கி உள்ளனர்.
யுவராஜ் சிங் பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூபாய் 50 லட்சம் வழங்கியுள்ளார் மற்றும் ஹர்பஜன் சிங் அவரது மனைவியும் இணைந்து 5 ஆயிரம் குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கி உள்ளனர்.