அகமது படேல் மரணம்: பிளவடையாமல் தப்பிக்குமா காங்கிரஸ்?
அகமது படேல் மரணம்: பிளவடையாமல் தப்பிக்குமா காங்கிரஸ்?
காங்கிரஸ் கட்சியில் முக்கியமான தலைவரும் சோனியா காந்திக்கு மிக நெருக்கமான அரசியல் ஆலோசகருமான அகமது பட்டேல் கொரனா வைரஸ் சிக்கல்கள் காரணமாக சமீபத்தில் உயிரிழந்தார்.
குஜராத்தை சேர்ந்த அகமது பட்டேலுக்கு பல முகங்கள் உண்டு. திரைக்குப் பின்னால் இருந்து காங்கிரஸ் கட்சியை இயக்குபவர், உள்ளிருக்கும் அனைத்து கோஷ்டிப் பூசல்களையும் சரிசெய்து ஒன்றிணைப்பவர், UPA அரசாங்கம் நடந்த காலத்தில் காங்கிரஸ் கட்சிக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான பாலத்தை ஏற்படுத்தியவர், 20 வருடங்களாக சோனியா காந்தியின் நெருங்கிய ஆலோசகர், கட்சியின் பொருளாளராக காங்கிரஸின் பணப்பையை கட்டுப்படுத்தியவர் என அவரின் பணிகள் பல.
2014ல் இருந்து பா.ஜ.கவின் ஆதிக்கம் இந்திய அரசியலில் ஆரம்பித்ததில் இருந்து, கடந்த ஆறு வருடங்களாக அகமது படேல் செய்துவந்த பணி என்ன என்று பலரும் மறந்து இருக்கலாம். அது மன சோர்வடைந்து வலுவிழந்த காங்கிரசை ஒன்றாக இணைத்து வைத்திருந்தது.
காங்கிரஸ் கட்சி நடந்து வரும் முறை பற்றி பல தலைவர்கள் அதிருப்தியில் இருக்கின்றார்கள். பீஹார் தேர்தலில் காங்கிரசின் மோசமான செயல்பாட்டிற்கு பிறகு அவர்களுடைய அதிருப்தி மறுபடியும் வெளிப்படையாக வெடித்தது. இந்நிலையில் இம்மாதிரி அதிருப்தியாளர்களை சமாளிக்கும் திறமை உடைய ஒருவரை சோனியாகாந்தி இழந்து விட்டார்.
கடந்த ஜூலை மாதம், இளம் தலைவரான சச்சின் பைலட், ராஜஸ்தானில் அசோக் கெலாட்டை எதிர்த்து போராடினார். அப்போது, ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசாங்கத்தை காப்பாற்ற அகமது பட்டேல் பின்னாலிருந்து ஆவேசமாக செயல்பட்டதாக அறியப்படுகிறது. தற்போது அவர் இல்லாமல், சமாதான உடன்படிக்கை கூட கையெழுத்திடப்படாமல் இருக்கிறது.
UPA ஆட்சியின் போதும் இது போல ஒரு நிலைமை இருந்தது. அப்பொழுது இந்த வேலையை பிரணாப் முகர்ஜி வெளிப்படையாக செய்து வந்தார். ஆனால் பின்னாலிருந்து அகமது பட்டேல் தான் இப்பணியை செய்து வந்தார்.