மொழியை வைத்து மக்களை ஏமாற்றும் செயல் இது. மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்.

Update: 2024-10-22 02:48 GMT

மொழியை வைத்து மக்களை ஏமாற்றும் செயல் இனியும் எடுபடாது என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார். சென்னை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டியில் கூறும் போது, தமிழக கவர்னர் ரவியை திரும்ப பெற வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியது, மக்களை திசை திருப்பும் செயல். ஹிந்தி மாதம் என்பது மத்திய அரசின் அனைத்து துறைகளிலும், ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிப்பது வாடிக்கையாகி வருகிறது.


திமுக, காங்கிரஸ் கூட்டணி மத்தியில் ஆட்சியில் இருந்தபோதும், ஹிந்தி வாரம் கடைபிடிக்கப்பட்டது. மத்திய அமைச்சர்களாக, தி.மு.க.,வினர் இருந்த துறைகளிலும் அதை முழுமையாக கடைபிடித்தனர்.தமிழ் மொழியை பாதுகாப்பதிலும், உலகளவில் எடுத்து செல்வதிலும் முதன்மையாக இருப்பவர் பிரதமர் மோடி. தேர்தல் வாக்குறுதியில் கூறியதை போல திருவள்ளுவருக்கு கலாசார மையம் ஏற்படுத்தி இருக்கிறோம்.

இப்படித்தான் தமிழ் மொழியை உலக அளவில் போற்றுதலுக்குரிய மொழியாக ஆக்கி இருக்கிறோம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் திமுக மொழி பிரச்சனையை வைத்து மக்களை ஏமாற்றும் செயல்களை செய்து வருகிறது அது இனி தமிழ்நாட்டில் எடுபடாது என்று கூறியிருக்கிறார்

Input & Image courtesy: News 

Tags:    

Similar News