சனாதனம் குறித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்க மறுக்கும் உதயநிதி! நீதிமன்ற அவமதிப்பா!

Update: 2024-10-21 17:15 GMT

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆண்டி அம்பலம் இல்ல திருமண விழாவில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று அங்கு பேசுகையில், பெண்கள் வீட்டை விட்டு வெளியே வராத காலம் இருந்தது. இதற்கு அண்ணா, ஈ.வே.ரா, மு.க.ஸ்டாலின் போன்ற தலைவர்கள் குரல் கொடுத்தனர். நானும் இந்த பிரச்னைகள் குறித்து பேசியுள்ளேன். 

மேலும் பல்வேறு நீதிமன்றங்களில் தனக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்குகள் அனைத்து தவறாக சித்தரிக்கப்பட்டவையாக உள்ளது. தற்பொழுது தமிழக மட்டுமின்றி இந்தியாவில் உள்ள பல நீதிமன்றங்களில் என் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. நீதிமன்றம் என்னை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியது ஆனால் நான் சொன்னது தான் சொல்லப்படுகிறது நான் கலைஞரின் பேரன் எதற்கும் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று கூறினேன். அதனால் இப்பொழுது குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறேன் என்று கூறினார். 

தொடர்ந்து பேசிய துணை முதல்வர் உதயநிதி, தமிழகத்தில் ஹிந்தியை திணிக்கும் முயற்சிகளை விமர்சித்து நுணுக்கமான வழிகளில் ஹிந்தியை திணிக்க முயற்சி நடக்கிறது. நேரடியாகத் திணிக்க முடியாத நிலையில் தமிழ்ச் சொற்களை வாழ்த்துக்களில் இருந்து துடைத்துவிட்டு, புதிய கல்விக் கொள்கை என்ற போர்வையில் தமிழ்நாட்டின் மீது இந்தியைத் திணிக்க முயல்கின்றனர். இந்த முயற்சிகளுக்கு பலர் ஆதரவு தெரிவித்தாலும் தமிழக மக்கள் எதிர்த்தனர். அண்ணாவின் பெயரைச் சூட்டிய தமிழ்நாடு என்ற பெயரையும் சிலர் மாற்ற முயன்றனர், ஆனால் பரவலான எதிர்ப்புகளைத் தொடர்ந்து மன்னிப்பு கேட்க வேண்டியதாயிற்று. தமிழ் கலாச்சாரத்தில் இருந்து திராவிட அடையாளத்தை அழிக்கும் முயற்சிகளும் நடக்கின்றன. இதை எதிர்த்து திமுக உறுதியாக நிற்கும். தமிழர்கள் இருக்கும் வரை நமது மொழி, கலாச்சாரம் மற்றும் திராவிட அடையாளம் தீண்டத்தகாததாகவே இருக்கும் என்று கூறினார். 

முன்னதாக சனாதன தர்மத்தைப் பற்றி அவதூறாகப் பேசியதாக வழக்கு விசாரணையை எதிர்கொள்ள பெங்களூரு சிறப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் துணை முதல்வர் உதயநிதி ஆஜரானார். மேலும் அவர் ரூ.1 லட்சம் ரொக்கப் பிணையில் ஜாமீன் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News