"விபூதியை தரையில் கொட்டிய நீங்கள் குல்லா போடாமல் நோன்பு கஞ்சி குடிக்க தயாரா?" கனிமொழியை விளாசிய ஹெச்.ராஜா

"விபூதியை தரையில் கொட்டிய நீங்கள் குல்லா போடாமல் நோன்பு கஞ்சி குடிக்க தயாரா?" கனிமொழியை விளாசிய ஹெச்.ராஜா

Update: 2020-11-04 15:56 GMT

தி.மு.க'வினர் தற்பொழுது ஏதாவது அறிக்கை வெளியிடுகிறேன், கருத்து சொல்கிறேன் என்ற பெயரில் தனக்குத்தானே மண்ணை வாரி தலையில் போட்டுக்கொள்கின்றனர். அந்ந வகையில் இன்று தி.மு.க எம்.பி'யும், கருணாநிதி அவர்களின் மகளுமான கனிமொழி தனது ட்விட்டர் பதிவில் எழுப்பிய கேள்விக்கு பா.ஜ.க'வின் ஹெச்.ராஜா சராமரி பதில் அளித்துள்ளார்.

கனிமொழி ட்விட்டர் பக்கத்தில், ‘’தமிழ்க் கடவுளாக கொண்டாடப்படும் முருகனுக்கு யாத்திரை நடத்தவேண்டும் என்று அனுமதி கேட்கும் தமிழக பா.ஜ.க, அது போலவே தமிழைத் தேசிய மொழியாக்கவும் கோரிக்கை வைக்குமா?’’என கனிமொழி கேள்வி எழுப்பி இருந்தார்.

அதற்கு ஹெச்.ராஜா, ‘’முதலில் தேவர் பெருமானாரின் குருபூஜையில் திருநீறை தட்டி கீழே கொட்டிய நீங்கள் குல்லா போடாம நோம்பு கஞ்சி குடிக்க தயாரா என்று சொல்லுங்க’’ என பதிலடி கொடுத்துள்ளார்.

எதெற்கெடுத்தாலும் தமிழுக்கு ஏதும் செய்யவில்லை என அறைகூவல் விடுக்கும் கனிமொழி தான் தந்தை ஆட்சியில் 5 முறை இருந்தும் தமிழுக்கு ஏதும் செய்யவில்லை என ஒப்புக்கொள்கிறாரா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Similar News