மகாராஷ்டிராவில் 3 மாதங்களில் பா.ஜ.க., ஆட்சி.. மத்திய அமைச்சர் அதிரடி பேச்சு.!

மகாராஷ்டிராவில் 3 மாதங்களில் பா.ஜ.க., ஆட்சி.. மத்திய அமைச்சர் அதிரடி பேச்சு.!

Update: 2020-11-24 18:06 GMT

மஹாராஷ்டிராவில் அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில், பா.ஜ.க., ஆட்சியமைக்கும் என்றும், அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக மத்திய அமைச்சர் ராவ்சாஹேப் தான்வே பேசியுள்ளார்.


மஹாராஷ்டிரா மாநிலத்தில் சட்டசபை தேர்தலில் பாஜ.கவுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டு வெற்றிப்பெற்ற சிவசேனா, பின்னர் முதலமைச்சர் பதவிக்காக காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்தது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, முதலமைச்சராக பொறுப்பேற்று கிட்டத்தட்ட ஓராண்டாகிவிட்டது.

இந்நிலையில், அவுரங்காபாத்தில் கட்சி நிர்வாகிகளிடையே, சட்ட மேலவை தேர்தல் தொடர்பாக மத்திய அமைச்சர் ராவ்சாஹேப் தான்வே பேசியதாவது: மகாராஷ்டிராவில் நமது அரசை அமைக்க முடியாது என்ற முடிவுக்கு கட்சித் தொண்டர்கள் வந்துவிட வேண்டாம். அடுத்த 2 அல்லது 3 மாதங்களுக்குள் இந்த மாநிலத்தில் நாம் ஆட்சியமைப்போம். அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது, இந்த சட்ட மேலவைக்கான தேர்தல் முடிவதற்காக காத்திருக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.


இவரது பேச்சால் பாஜக தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். உத்தவ்தாக்கரே, காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்து இந்துக்களின் உரிமையை விட்டுக்கொடுத்து வருவதாக அம்மாநில பாஜகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News