சைவ மடாதிபதிகள் பெயரை பயன்படுத்தி பித்தலாட்டத்தில் ஈடுபட்ட திருமுருகன் காந்தி உள்ளிட்ட பெரியார் இயக்கத்தினர்.!

சைவ மடாதிபதிகள் பெயரை பயன்படுத்தி பித்தலாட்டத்தில் ஈடுபட்ட திருமுருகன் காந்தி உள்ளிட்ட பெரியார் இயக்கத்தினர்.!

Update: 2020-10-23 19:31 GMT

பெரியாரிய இயக்கங்கள் தற்பொழுது கடவுள் மறுப்பு என்னும் நாடகத்தை கைவிட்டு சைவ மடாதிபதிகளை தங்கள் மேடைகளில் ஏற்றி புது நாடகத்திற்கு முயற்சி செய்கின்றன. அதிலும் குறிப்பாக ஒரு ஆன்லைன் நிகழ்ச்சிக்கு மடாதிபதிகள் இருவரை சிறப்பு விருந்தினர்களாக தங்களின் அழைப்பிதழில் சேர்த்து வெளியிட்டுள்ளன. விருந்தினர்களின் பேச்சாளர்கள் பட்டியலில் "பேருர் ஆதீனம் மருதாச்சலம் அடிகளார்" மற்றும் "சிரவை ஆதீனம் குமரகுரு அடிகளார்" ஆகிய இருவரை ஆன்லைன் நிகழ்வுக்கு சிறப்பு பேச்சாளர்களாக அழைத்து நிகழ்ச்சி நிரலை வெளியிட்டுள்ளது.


இந்த இரு ஆதீனங்களும் சிவனை வணங்கும் சைவ மடாதிபதிகள். அதிலும் குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த சைவ மடாதிபதி ஆவார்கள். ஈ.வே.ராமசாமி கூட்டத்தினர் எனும் கடவுள் மறுப்பாளர்கள் மத்தியில் இந்த சைவ மடாதிபதிகள் எதற்கு? இனி கடவுள் இல்லை என்ற கோஷம் தமிழகத்தில் எடுபடாது, அதனை வைத்து பிழைக்க முடியாது என்ற உண்மையை பெரியாரிய இயக்கங்கள் உணர்ந்ததாலா?

சில தினங்கள் முன்பு மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி மற்றும் சில பெரியாரிய இயக்கத்தினர் தமிழகத்திற்கு ஒரு கொடியை வெளியிட்டனர். வெள்ளை நிற பின்புலத்தில் இன்றைய தமிழ் நாட்டின் வரைபடத்தை சிகப்பு வண்ணத்தில் கொண்டுள்ளது அந்த கொடி. கொடியை அறிமுகம் செய்த திருமுருகன் காந்தி பேசியதாவது, "சாதி, மதம் கடந்து தமிழகத்திற்கு ஒரு கொடி வேண்டும் எனவும் கிரிக்கெட் அணிகளுக்கே கொடி இருக்கும் போது ஏன் தமிழ் நாட்டிற்கு இல்லை" எனவும் பேசியுள்ளார்.

மேலும் இந்த கொடியை தமிழக அரசு ஏற்று நவம்பர் 1ம் தேதியை அரசு விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தனர். இந்த கூட்டத்தில் திருமுருகன் காந்தி, கோளத்தூர் மணி (திராவிடர் விடுதலை கழகம்), திரைப்பட இயக்குனர் கரு பழனியப்பன், திராவிட கழகம் தலைவர் கே.வீரமணி மற்றும் இந்து மதத்தைத் மட்டும் தாக்கி பேசக்கூடிய மற்ற உறுப்பினர்கள் போன்ற விருந்தினர்கள் பேச்சாளர்களாக பங்கேற்றனர்.

மேலும் இதில் சைவ மடாதிபதிகள் பெயர் இருப்பதை கண்டு பல இந்துக்களுக்கு அதிர்ச்சி காரணம் இந்து மதத்தை மட்டுமே தாக்கி பேசும் இந்த கூட்டத்திற்கு எப்படி மடாதிபதிகள் தொடர்பு எனவும், இதன் பிண்ணனி என்ன எனவும் அறிந்துகொள்ள மடத்தின் அடிகளாரை தொடர்பு கொண்ட பொழுது இதன் பித்தலாட்ட பின்னணி வெளி வந்தது.

இதனை தெளிவுபடுத்திய பேருர் ஆதினத்தின் தவத்திரு.மருதாச்சல அடிகளார் கூறியதாவது, "தமிழ்நாட்டு விழா" என்ற நிகழ்ச்சியில் பேச பேருர் ஆதினம் மற்றும் சிரவை ஆதினத்திற்கு அழைப்பு விடுத்ததாகவும், இந்த விழாவில் இதுபோல் பெரியார் இயக்க பேச்சாளர்கள் பங்கேற்பது பற்றி ஏதுவும் அந்த விழா ஏற்பாட்டாளர்கள் கூறவில்லை எனவும் தெரிவித்தார். மேலும் இந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் மற்றும் பங்கேற்கும் பேச்சாளர்களை பற்றி அறிந்த பிறகு ஆதினங்கள் இருவரும் அந்த விழாவில் பங்கேற்கவில்லை என தெரிவித்தார்.

மே 17 இயக்கத்தின் இந்த பித்தலாட்ட செயலுக்கு விஸ்வ இந்து பரிஷத் வடக்கு தமிழ்நாட்டின் மாநிலத் தலைவர் சீனிவாசன் சுப்பிரமணியம் "தமிழ்" என்ற பெயரில் தேச விரோத கும்பல் ஆதினங்களை அவமதிக்க முயற்சித்ததாக கண்டனம் தெரிவித்தார். கடவுள் இல்லை என்றால் இனி வயிறு பிழைக்காது இனி தமிழ் தேசம் என்றால் மட்டுமே உணவு உண்ண முடியும் என்று உணர்ந்த பெரியாரிய செயல்பாட்டாளர்களின் முகமூடி கிழிந்து தொங்குகிறது.

Similar News