தி.மு.கவிடம் இரட்டை இலக்க தொகுதி 'யாசகம்' வாங்க திருமாவளவன் கையில் எடுத்த இந்து மத எதிர்ப்பு.!
தி.மு.கவிடம் இரட்டை இலக்க தொகுதி 'யாசகம்' வாங்க திருமாவளவன் கையில் எடுத்த இந்து மத எதிர்ப்பு.!
அரசியல் தலைவர்கள் மக்களை பற்றி சிந்தித்து அவர்களின் முன்னேற்றத்தை பற்றி பேசி அரசியலில் வெற்றி பெற வேண்டும். மாறாக சில அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தனக்கு முக்கியத்துவம் இல்லாத போதும், தேர்தலின் போதும் எந்த ஒரு விவகாரத்தையாவது கையில் எடுத்து அதனை பற்றி சர்ச்சை வரும் வேளையில் மக்கள் மத்தியிலும், பிற கட்சிகளின் மத்தியிலும் கோபத்தையோ, அனுதாபத்தையோ சம்பாதித்து அதன் மூலம் பேசு பொருளாக வலம் வர வேண்டும் என நினைப்பர்.
அந்த வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் 'மனுஸ்மிரிதி' பற்றி பேசி தமிழகத்தில் அபரிமிதமாக வளர்ந்து வரும் பா.ஜ.கவின் எதிர்ப்பை சம்பாதித்து அந்த வெளிச்சத்தில் தி.மு.க கூட்டணியில் இரட்டை இலக்க தொகுதிகள் வாங்கி தேர்தலில் போட்டியிட முனைப்பு காட்டியுள்ளார்.
இன்னும் 6 மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரவிருக்கிறது. இதனை மையமாக வைத்து தமிழக அரசியல் கட்சிகள் தங்களின் முதல்வர் வேட்பாளர், கட்சி கூட்டணி, எந்த தொகுதிகள் யார் யாருக்கு, தேர்தல் அறிக்கை என பம்பரமாக சுழன்று வருகின்றனர்.
இதற்கிடையில் பிரதான கட்சிகளின் கணக்குகளோ தன்னோடு சட்டமன்ற தேர்தலில் இணையவிருக்கும் கட்சிகளோடு மறைமுகமாக கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடவும், அதற்கான தொகுதிகள் ஒதுக்கீடும் பற்றி பேச துவங்கிவிட்டன. இதற்கிடையில் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சியை யாரும் கண்டுகொள்ளவில்லை என்பதே உண்மை.
மற்ற கட்சிகள் எத்தனை தொகுதி ஒதுக்கப்படும், யார் வேட்பாளர் என பேசி வரும் நிலையில் விடுதலை சிறுத்தைகளோ யார் கூட்டணிக்கு கூப்பிடுவார்கள் என வேடிக்கை பார்த்துகொண்டு நிற்கும் சூழல் உருவானது. ஏற்கனவே இருக்கும் தி.மு.க கூட்டணியிலோ விடுதலை சிறுத்தைகள் இருந்தால் நல்லது, போனால் இன்னும் அதிகம் நல்லது என்ற தோணியிலே திருமாவளவன் கட்சியை கையாண்டு வந்தது. அப்படியே இருந்தாலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தி.மு.க'வின் சின்னமான உதயசூரியனில்'தான் போட்டியிட வேண்டும் என்ற கட்டளையும் இடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.