தி.மு.க. அழிந்த வரலாறு மு.க.ஸ்டாலினால் உருவாகும் – வரும் தேர்தலில் படுதோல்வி உறுதி: உண்மையை புட்டு வைத்த அமைச்சர்!

தி.மு.க. அழிந்த வரலாறு மு.க.ஸ்டாலினால் உருவாகும் – வரும் தேர்தலில் படுதோல்வி உறுதி: உண்மையை புட்டு வைத்த அமைச்சர்!

Update: 2021-01-10 07:06 GMT

தி.மு.க. அழிந்த வரலாறு மு.க.ஸ்டாலினால் உருவாகும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார். ஸ்டாலின் மக்களை குழப்பும் வகையில் கிராம மக்கள் சபை கூட்டம் என்று தன்னை அரசியலில் இருந்து விளம்பரப்படுத்திக் கொள்ள நாடகம் ஆடுகிறார். அந்த கூட்டத்தில் உண்மையான மக்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.

அதுமட்டுமல்லாது புலியை பார்த்து பூனை சூடு போட்டு கொண்டது போல் இன்றைக்கு ஒட்டுமொத்த இளைஞர்கள், விவசாயிகள், கிராம மக்கள் என அனைத்து தர மக்களும் முதலமைச்சர் மீதும், துணை முதலமைச்சர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். இந்த இருபெரும் தலைவர்களும் மிகுந்த சக்தி படைத்த தலைவர்களாக உள்ளனர். ஆகவே இவர்களை தனது பொய்ப் பிரச்சாரத்தின் மூலம் வீழ்த்தி விடலாம் என்று ஸ்டாலின் தப்பு கணக்கு போட்டு உள்ளார்.

இதே திமுக ஆட்சியில் இதுபோன்று கிராமசபை கூட்டத்தை ஸ்டாலின் நடத்தினாரா ஆனால் இன்றைக்கு முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் கிராமந்தோறும் மக்களை சந்தித்து வருகின்றனர். இது இயற்கையான நிகழ்ச்சி ஆனால் ஸ்டாலின் நடத்துவது செயற்கையான நிகழ்ச்சி ஆகும்.

திமுக ஆட்சி காலத்தில் தான் மின்வெட்டு இருந்தது ரவுடிகள் அராஜகம் இருந்தது விலைவாசி உயர்ந்தது அப்பாவி மக்களின் நிலங்கள் பறிக்கப்பட்டு இதையெல்லாம் சொல்லிக் கொண்டே போகலாம் திமுக ஆட்சியில் மக்களுக்கு வேதனை ஆட்சிதான் தந்தார்கள்.

கடந்த நான்கு முறை நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் நூறு சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை திமுக தாண்டவில்லை இதே கிராமசபை கூட்டத்தில் ஏதாவது ஒரு இடத்தில் திமுக ஆட்சியில் சாதனை செய்தேன் என்று ஸ்டாலின் கூற முடியுமா? ஆகவே வரும் தேர்தலில் திமுக என்ற கட்சி படுதோல்வி அடைந்து ஸ்டாலினால் திமுக அழிந்தது என்ற வரலாறு உருவாகும் என்று கூறியுள்ளார்.

Similar News