"உங்க ஏரியால எந்த ஜாதி ஓட்டு அதிகம்" என சர்வே எடுக்கும் ஐ பேக் - ஜாதி ஓட்டு விளையாட்டை துவங்கிய தி.மு.க.!

"உங்க ஏரியால எந்த ஜாதி ஓட்டு அதிகம்" என சர்வே எடுக்கும் ஐ பேக் - ஜாதி ஓட்டு விளையாட்டை துவங்கிய தி.மு.க.!

Update: 2020-12-05 06:30 GMT

வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற பீகாரை சேர்ந்த பிரசாந்த் கிஷோரிடம் 380 கோடியை ஒப்படைத்து தேர்தலுக்கு வேலை பார்க்க சொல்லி தி.மு.க அழைத்து வந்தது அனைவருக்கும் தெரியும். இதே போல் அனைத்து தொகுதியிலும் பகுதி வாரியாக தகவல்கள் சேகரிக்கும் பணியை "ஐ பேக்" நிறுவன ஊழியர்கள் செய்து வருகின்றனர். 

ஒவ்வொரு தொகுதியிலும் பகுதி வாரியாகவும், வார்டு வாரியாகவும் சென்று அந்த ஏரியா நிர்வாகிகளை சந்தித்து அவர்களிடம்  அந்த பகுதியில் என்ன பிரச்சினை நிலவி வருகிறது, எந்த மாதிரியான ஆட்களை நிறுத்தினால் தொகுதியில் வாக்குகளை அள்ள முடியும் என தகவல்களை திரட்டி வருகின்றனர். அதிலும் முக்கியமான கேள்வியாக "அந்த பகுதியில் எந்த ஜாதியினர் அதிகமாக வசிக்கின்றனர், எந்த ஜாதியினரை நிறுத்தினால் வாக்குகளை பெறலாம்" என்ற கேள்விகளையும் முக்கியமாக கேட்டு வருகின்றனராம்.

இதனால் உடன்பிறப்புகளே கோபமடைவதுடன், ஏன் இந்த வேலை என தலையில் அடித்து கொள்கின்றனராம். அதிலும் சில மூத்த உடன்பிறப்புகள் "தலைவர் கருணாநிதி 5 முறை முதல்வரானார், இதையெல்லாம் கேட்டா முதல்வரானார்?" என்ற தோனியில் தற்போதைய தலைமையை சந்தேகிக்க துவங்கிவிட்டனராம்.

Similar News