ரஜினி கட்சி துவங்குவது தி.மு.கவுக்கு ஆபத்து - கட்டியம் கூறும் எச்.ராஜா.!

ரஜினி கட்சி துவங்குவது தி.மு.கவுக்கு ஆபத்து - கட்டியம் கூறும் எச்.ராஜா.!

Update: 2020-12-11 08:31 GMT

"தி.மு.க'வில் ரஜினி ரசிகர்கள் அதிகம் உள்ளனர். ரஜினி கட்சி தொடங்குவதால் தி.மு.க'வுக்குதான் ஆபத்து" என பா.ஜ.க'வின் மூத்த தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

எச்.ராஜா மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் கூறியதாவது, "வேளாண் சட்டங்கள் குறித்து தி.மு.க பொய் செய்திகளை பரப்பி வருகிறது. மக்கள் மத்தியில் தேவையில்லாமல் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது தேர்தலை மனதில் வைத்து தி.மு.க இதை செய்து வருகிறது. இதை தி.மு.க நிறுத்திக் கொள்ள வேண்டும். 

வேளாண் சட்டங்களின் நன்மைகள் தெரியாமல் பேசுபவர்கள் முட்டாள்கள், அயோக்கியர்கள். 2ஜி வழக்கில் விரைவில் தீர்ப்பு வெளியாக உள்ளது. இதை நினைவில் வைத்து ஏ.ராஜா பேச வேண்டும். அவர் ஜனவரி 31 வரை தான் இவ்வாறு பேச முடியும். தி.மு.க கொள்ளையர்களின் கூட்டம். தி.மு.க'வுக்கு சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

மேலும், தி.மு.கவில் ரஜினி ரசிகர்கள் அதிகம் உள்ளனர். ரஜினி கட்சி தொடங்குவதால் தி.மு.க'வுக்குதான் ஆபத்து" என்று கூறினார்.

Similar News