கேரளா உள்ளாட்சி தேர்தல்.. 3 நகராட்சி, 3 ஒன்றியங்களை கைப்பற்றிய பாஜக.!

கேரளா உள்ளாட்சி தேர்தல்.. 3 நகராட்சி, 3 ஒன்றியங்களை கைப்பற்றிய பாஜக.!

Update: 2020-12-16 15:52 GMT

கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் 3 கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. கடந்த 8ம் தேதி முதல் கட்ட தேர்தலும், 10ம் தேதி 2ம் கட்ட தேர்தலும், 14ம் தேதி இறுதிக்கட்ட தேர்தலும் நடைபெற்றது. 

3 கட்டங்களாக நடத்தப்பட்ட தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. இதில் 3 நகராட்சியை பாஜக பிடித்துள்ளது. பூஜாபுராவில் வழக்கறிஞர் வி.வி.ராஜேஸ் வெற்றி பெற்றுள்ளார். இவர் கட்சியின் மாவட்ட தலைவராகவும் உள்ளார்.

பாண்டலம் நகராட்சியில் பாஜக கூட்டணி 17 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மேலும், 3 ஊராட்சி ஒன்றியங்களையும் பாஜக பிடித்துள்ளது. கிராம பஞ்சாயத்துகளில் 29 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. கடந்த ஆண்டைவிட பாஜக உள்ளாட்சியில் அதிக இடங்களை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Similar News