விமானம் மூலம் சென்னை அழைத்துவரப்படும் எம்.எல்.ஏ பூங்கோதை.. தயார் நிலையில் அப்போலா மருத்துவமனை.!

விமானம் மூலம் சென்னை அழைத்துவரப்படும் எம்.எல்.ஏ பூங்கோதை.. தயார் நிலையில் அப்போலா மருத்துவமனை.!

Update: 2020-11-20 12:35 GMT

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. பூங்கோதை ஆலடி அருணா நேற்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம், திமுகவினர் இடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை உட்கொண்ட நிலையில் நெல்லையில் ஷிபா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக எம்.எல்.ஏ. பூங்கோதை ஆலடி அருணா, அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை அழைத்து வரப்படுகின்றார்.


சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்கு அனுமதிக்க முடிவு செய்து ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி விமான நிலையம் கொண்டு செல்லப்பட்டார்.


அவரது உடல்நிலை பற்றி திமுகவினர் அச்சம் அடைந்துள்ளனர். பூங்கோதை கனிமொழி கோஷ்டி என்று கூறப்படுகிறது. மற்றொரு தரப்பு ஸ்டாலின் கோஷ்டி என்று கூறப்படுகிறது. இரண்டு தரப்பிற்கும் அதிகார போட்டியின் காரணமாக இந்த நிகழ்வு நடந்துள்ளதாக அக்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
மாநிலம் முழுவதும் திமுக தலைவர் ஸ்டாலின் சட்டம் ஒழுங்கு குறித்து கேள்வி எழுப்பி வருகின்றார். ஆனால் உட்கட்சியில் ஒரு எம்.எல்.ஏ.வுக்கே பாதுகாப்பு இல்லை என்று தமிழக மக்கள் கேள்வி கேட்க தொடங்கிவிட்டனர்.
 

Similar News