பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத வெறியில் பொய் பிரச்சாரத்தை அள்ளி வீசும் தி.மு.க - விளாசும் பொள்ளாச்சி ஜெயராமன்.!

பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத வெறியில் பொய் பிரச்சாரத்தை அள்ளி வீசும் தி.மு.க - விளாசும் பொள்ளாச்சி ஜெயராமன்.!

Update: 2020-12-03 07:30 GMT

தி.மு.க'வின் அரசியலை தற்பொழுது மூத்த அரசியல்வாதிகள் முதல் புதிதாக அரசியலுக்கு வரும் அனைவரும் கணிக்க துவங்கிவிட்டனர். தி.மு.க'வின் செயல்பாடுகளையும் அதன் நகர்வுகளையும் துல்லியமாக எடை போட்டு அறிக்கை வெளியிடுகின்றனர். அந்த வகையில் "கடந்த பத்து ஆண்டுகளாக ஆட்சியில்  இல்லாததால் வெறிகொண்டு ஆட்சிக்கு வரவேண்டும் என துடித்துக்கொண்டிருக்கும் தி.மு.க, மக்களிடையே பொய் பிரச்சாரங்களை அள்ளி வீசி வருகிறது" என தி.மு.க'வின் பதவி வெறியை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில்  காங்கேயம் ஒன்றிய அ.தி.மு.க சார்பில் தகவல் தொழில்நுட்ப பிரிவு இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில்  திருப்பூர் மாநகர மாவட்ட கழக செயலாளரும், துணை சபாநாயகராக பொள்ளாச்சி ஜெயராமன் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.

அப்போது பேசிய அவர், "புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கழகம் தனக்குப் பின்னாலும் தமிழகத்தில் நூறு ஆண்டுகள் ஆட்சி செய்யும். அதிமுக ஆட்சி தொடர்வதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது" என தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், "தி.மு.க'வினர் கடந்த 10 ஆண்டுகளாக  ஆட்சியில் இல்லாததால் ஆட்சிக்கு வரவேண்டும் என்று வெறிகொண்டு துடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்காக மக்கள் மத்தியில் பொய் பிரச்சாரத்தை அள்ளி வீசி வருகின்றனர். ஆனால் அந்த பொய் பிரச்சாரங்களை மக்கள் ஒருபோதும் நம்பப் போவதில்லை, அ.தி.மு.க ஆட்சியில் மீண்டும் அரியணை ஏறுவது உறுதி" என நம்பிக்கைபட பேசினார்.

Similar News