ரஜினி மன்றம் இன்று கட்சியாக பதிவு.. டெல்லிக்கு படையெடுத்த நிர்வாகிகள்..!

ரஜினி மன்றம் இன்று கட்சியாக பதிவு.. டெல்லிக்கு படையெடுத்த நிர்வாகிகள்..!

Update: 2020-12-11 07:13 GMT

ரஜினி கட்சி பெயர், இன்று டெல்லியில் பதிவு செய்யப்படுகிறது. இதற்காக வழக்கறிஞர்களுடன், மன்றத்தின் முக்கிய நிர்வாகிகள் டெல்லிக்கு படையெடுத்துள்ளனர். கொரோனா தொற்று காரணமாக வீட்டிலேயே முடங்கிய ரஜினியின் அரசியல் பிரவேசம், தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

சென்னையில் சில நாட்களாக, தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜுனமூர்த்தி, மேற்பார்வையாளர் தமிழருவி மணியன் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் ரஜினி ஆலோசனை நடத்தினார். அப்போது கட்சிக்கு சில பெயர்களை தேர்ந்தெடுத்துள்ளதாக தெரிகிறது. அதில் ஒன்றை ரஜினி தேர்வு செய்ததாக கூறப்படுகிறது.

அந்த பெயரை டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் இன்று பதிவு செய்ய உள்ளனர். இதற்காக, வழக்கறிஞர்களுடன், மன்ற நிர்வாகிகள் சிலர் டெல்லி சென்றுள்ளனர்.

இதனை தொடர்ந்து கட்சி கொடி மற்றும் மாநில நிர்வாகிகளையும் தேர்வு செய்ய உள்ளனர். நாளை பிறந்த நாளை கொண்டாடும் நிலையில் இன்று கட்சி பதிவு செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Similar News