இஸ்லாமியர்களுக்காக அம்பேத்கர் சிலையையே அகற்றச் சொன்ன திருமாவளவன்.!
இஸ்லாமியர்களுக்காக அம்பேத்கர் சிலையையே அகற்றச் சொன்ன திருமாவளவன்.!
தாழ்த்தபப்ட்டோரின் காவலராக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் திருமாவளவன் எப்போதும் தி.மு.கவின் அடியாளாகவே செயல்பட்டு வந்திருக்கிறார். சமீபத்திய மனு தர்ம எதிர்ப்பு பிரச்சாரம் கூட தி.மு.கவின் ஏவலில் நடக்கும் நாடகம் தான் என்பதே தமிழக அரசியலை உற்று நோக்கி வரும் பலரின் கருத்தாக இருக்கிறது. தி.க மற்றும் பெரியாரிய இயக்கங்கள் பொதுவாக இந்து எதிர்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தாலும் அவை அவ்வளவாக மக்களை சென்றடையாததாலும் தி.மு.க நேரடியாக இந்து எதிர்ப்பு அரசியலில் இறங்குவது அவ்வளவு உசிதமில்லை என்பதாலும் எம்.பி சீட்டுக்காக அண்டிப் பிழைக்கும் திருமாவளவனை வைத்து "சனாதனத்தை வேரறுப்போம்", "மனு தர்மத்தைக் கொளுத்துவோம்" என்று மறைமுகமாக இந்து எதிர்ப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
பெண்கள் முன்னேற்றம், சமூக நீதி என்று பெயர் சூட்டிக் கொண்டாலும் இத்தகைய பிரச்சாரங்கள் இந்து எதிர்ப்பு மட்டுமே என்றும் பிற மதங்கள் என்று வரும் போது பெயருக்கு வைத்திருக்கும் கொள்கையைக் கூட கடாசுபவர்கள் தான் திருமாவளவனும் ஸ்டாலினும் என்பதற்கு உதாரணமாக பத்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவத்தை இங்கே நினைவு கூரலாம். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே பழையபட்டிணம் என்ற ஊர். சம்பவம் நடந்த சமயத்தில் அங்கு சற்றேறக்குறைய 200 தாழ்த்தப்பட்டோர் குடும்பங்களும் 35 இஸ்லாமிய குடும்பங்களும் இருந்ததாகக் கூறப்படுகிறது.
தாழ்த்தப்பட்டோர் பெரும்பான்மையாக இருந்த ஊரில் நூலகத்துக்கு முன் அம்பேத்கர் சிலை ஒன்றை நிறுவ கிராம சபைக் கூட்டத்தில் முடிவு செய்திருக்கிறார்கள். அதன் பின்னர் வந்த பஞ்சாயத்துத் தேர்தலில் அப்துல் என்பவர் போட்டியிட்டு தோற்றிருக்கிறார். தன்னுடைய தோல்விக்குக் காரணம் தலித் மக்கள் தான் என்ற கோபத்தில் அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டது பிடிக்காமல் பிரச்சினை செய்துள்ளார். சிலை வைக்கப்பட்ட இடத்துக்கும் இஸ்லாமியர் குடியிருப்புக்கும் எந்த தொடர்பும் இல்லாத நிலையிலும் இஸ்லாமிய மக்கள் உருவ வழிபாட்டை எதிர்ப்பவர்கள் என்பதால் சிலையை நீக்க வேண்டும் என்று பிரச்சினை செய்திருக்கிறார்கள். சிலைக்கு மாலை, மரியாதை செய்ய தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அனுமதி மறுத்திருக்கிறார்கள்.