காவி உடையில் திருவள்ளுவர்.. அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்.!

காவி உடையில் திருவள்ளுவர்.. அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்.!

Update: 2020-12-28 09:54 GMT

கல்வித் தொலைக்காட்சியில் காவி நிறத்தில் திருவள்ளுவர் படம் தவறுதலாக ஒளிபரப்பானது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

கொரோனா தொற்று காரணத்தினால் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி வாயிலாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

கல்வி தொலைக்காட்சியில் ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் ஒளிபரப்பின்போது காவி உடையில் திருவள்ளுவர் படம் ஒளிபரப்பானதால் மீண்டும் சர்ச்சை வெடித்துள்ளது.

இந்நிலையில், கல்வி தொலைக்காட்சியில் காவி உடையில் ஒளிபரப்பான திருவள்ளுவர் புகைப்படம் தொடர்பாக இன்று பள்ளிகல்வித்துறை ஆலோசனை நடத்துகிறது. அத்துடன் சர்ச்சைக்குரிய பதிவுகளை தவிர்க்க வேண்டும் என ஆசிரியர்களுக்கு பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் இது பற்றி அமைச்சர் செங்கோட்டையன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், கல்வித் தொலைக்காட்சியில் காவி நிறத்தில் திருவள்ளுவர் படம் வந்ததற்கு எந்த உள்நோக்கமும் இல்லை. அது தவறுதலாகவே ஒளிபரப்பானது. அரசின் கவனத்திற்கு வந்த பிறகு உடனடியாக காவி நிறம் உடை மாற்றப்பட்டுவிட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வேண்டும் என்றே உள்நோக்கம் கற்பித்து வருகின்றன என அதிமுக குற்றம்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Similar News