எங்க கட்சிக்கு இது புதுசு இல்ல.. பிக்பாக்கெட் அடித்த திமுக மாஜி பெண் கவுன்சிலர் கைது.!

எங்க கட்சிக்கு இது புதுசு இல்ல.. பிக்பாக்கெட் அடித்த திமுக மாஜி பெண் கவுன்சிலர் கைது.!

Update: 2020-11-30 13:56 GMT

பிக்பாக்கெட் அடித்த திமுக முன்னாள் பெண் கவுன்சிலரை போலீசார் கைது செய்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர், சாய்நாதபுரத்தைச் சேர்ந்தவர் தாகீரா பேகம் 40, இவரது மகன் அத்தர் 20, இருவரும் நேற்று காலை 11 மணிக்கு வேலூர் சாரதி மாளிகையில் பொருட்கள் வாங்கச் சென்றனர். அப்போது ஒரு பெண் திடீரென தாகீரா பேகம் வைத்திருந்த கைப்பையை பறித்துக் கொண்டு ஓடினார்.


அதிர்ச்சியடைந்த தாகீரா பேகம், கூச்சலிட்டார். பொதுமக்கள், கைப்பையை பறித்து சென்ற பெண்ணை துரத்தி பிடித்து, தர்மஅடி கொடுத்தனர். அவரை வேலூர் வடக்கு போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் ஆம்பூர் அடுத்த நரியம்பட்டைச் சேர்ந்த திமுக முன்னாள் யூனியன் கவுன்சிலர் பாரதி, 49 என்பது தெரியவந்துள்ளது.


மேலும், அவர் கவுன்சிலராக இருந்தபோதே, 2007ம் ஆண்டு பிக்பாக்கெட் அடித்த வழக்கில், இரண்டு முறை கைது செய்யப்பட்டு, சிறைக்குச் சென்று வந்தது தெரியவந்தது. போலீசார் பாரதியை கைது செய்து, வேலூர் பெண்கள் சிறையில் அடைத்தனர். 


திருடுவது திமுகவினருக்கு இது ஒன்றும் புதிது இல்லை என்று பொதுமக்கள் பேசி கொள்வதை பார்க்க முடிகிறது. இவர்கள் எப்போதுதான் திருந்த போவர்கள் என தெரியவில்லை என்று வேதனையுடன் மக்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
 

Similar News