பூரண கும்ப மரியாதை, திருநீரு வைக்க எதிர்ப்பு தெரிவித்த உதயநிதி.. இந்துக்களை அவமானப்படுத்தும் திமுக கோஷ்டி.!

பூரண கும்ப மரியாதை, திருநீரு வைக்க எதிர்ப்பு தெரிவித்த உதயநிதி.. இந்துக்களை அவமானப்படுத்தும் திமுக கோஷ்டி.!

Update: 2020-11-21 10:50 GMT

100 நாள் பிரச்சாரம் என்று திமுக சார்பில் தொடங்கப்பட்டுள்ளது. இதன் தொடக்கம் நேற்று திருவாரூர் மாவட்டம் மறைந்த கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளையில் நடைபெற்றது.


இந்நிலையில், தி.மு.க., இளைஞர் அணி செயலாளர் உதயநிதி கயிலாசநாதர் கோவில் சார்பில் கொடுத்த பூரண கும்ப மரியாதையை ஏற்க மறுத்துள்ளார். 100 நாள் பிரச்சாரத்தை முன்னிட்டு தி.மு.க., இளைஞர் அணி செயலர் உதயநிதி, நேற்று திருச்சி வந்தார். அவருக்கு கரியமாணிக்கம் கைலாசநாதர் கோவில் சார்பில், பூரண கும்ப மரியாதை வழங்க திமுக கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர். 


இதன்படி உதயநிதி வந்த போது கோவில் சிவாச்சாரியார்கள் பூரண கும்பம் மற்றும் பரிவட்டத்துடன் காத்திருந்தனர். ஆனால், உதயநிதி பரிவட்டம் கட்ட மறுப்பு தெரிவித்ததோடு, சிவாச்சாரியார்கள் தன் நெற்றியில் திருநீறு மற்றும் குங்குமம் வைக்கவும் வேண்டாம் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.
இது சிவாச்சாரியார்களுக்கு பலத்த அவமானமாக கருதுகின்றனர். இவர்கள் எப்படி தமிழ்நாட்டில் உள்ள இந்துக்களுக்கு நன்மை செய்ய போகிறார்கள் என கேள்வி கேட்டுள்ளனர்.


இந்த சம்பவம், நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த தி.மு.க.,வினர் மட்டுமின்றி, பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அவரது தந்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கோவிலில் திருநீரை கீழே போட்டு அவமானப்படுத்தினார். தற்போது அவரது மகன் உதயநிதி கோவிலை அவமதித்து சென்றுள்ளார். இருவராலும் இந்துக்களுக்கு பெரும் ஆபத்து ஏற்படும் என்பது ஒட்டு மொத்த இந்துக்களின் குரலாக அமைந்துள்ளது.
 

Similar News