வேல் யாத்திரை வெற்றிகரமாக நடந்துள்ளது.. தமிழக பாஜக தலைவர் பேட்டி.!

வேல் யாத்திரை வெற்றிகரமாக நடந்துள்ளது.. தமிழக பாஜக தலைவர் பேட்டி.!

Update: 2020-12-07 11:28 GMT

பாரதிய ஜனதா நடத்திய வேல் யாத்திரையை திருச்செந்தூரில் இன்று நிறைவு பெற உள்ளது. நிறைவு விழாவில் மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கலந்து கொள்ள உள்ளதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார்.


கடந்த நவம்பர் மாதம் 6ம் தேதி வேல் யாத்திரை தொடங்கப்பட்டது. அக்கட்சியின் மாநிலத்தலைவர் எல்.முருகன் தலைமையில் அறுபடை வீடு உள்ளிட்ட தமிழகம் முழுவதும் வேல் யாத்திரை நடைபெற்றது.


இந்நிலையில், திருச்செந்தூரில் வேல் யாத்திரை நிகழ்ச்சி நிறைவடைகிறது. இதற்காக திருச்செந்தூருக்கு சென்றிருந்த எல்.முருகன், வேல் யாத்திரையில் வைக்கப்பட்டிருந்த 3 அடி கொண்ட ஐம்பொன் வேலை கோயிலுக்கு காணிக்கையாக செலுத்தினார்.


இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: வேல் யாத்திரை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. கொரோனா ஊரடங்கு இருப்பதால் உள் அரங்கில் நிறைவு நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது என கூறினார். வேல் யாத்திரை மிகப்பெரிய மாற்றத்தை தமிழகத்தில் ஏற்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.

Similar News