ரஜினி கட்சி தொடங்குவாரா.. இல்லையா... குருமூர்த்தியுடன் இரவு முழுவதும் ஆலோசனை நடத்திய அமித்ஷா?.. நடந்தது என்ன.!

ரஜினி கட்சி தொடங்குவாரா.. இல்லையா... குருமூர்த்தியுடன் இரவு முழுவதும் ஆலோசனை நடத்திய அமித்ஷா?.. நடந்தது என்ன.!

Update: 2020-11-22 12:10 GMT

தமிழகத்திற்கு 2 நாள் சுற்றுப்பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை புரிந்தார். சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டார். 

இதன் பின்னர் அமித்ஷா சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள லீலா பேலஸ் ஓட்டலுக்கு கிளம்பிச் சென்றார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதன் பின்னர் இரவு 8 மணிக்கு மேல் தமிழக பாஜக நிர்வாகிகளுடன் அமைச்சர் ஆலோசனையில் ஈடுபட்டார்.


இதில், சிறப்பு விருந்தினராக அமைச்சர் பங்கேற்றார். நிகழ்ச்சியில், தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி, மாநிலத் தலைவர் எல்.முருகன், மூத்த தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து ஆடிட்டர் குருமூர்த்தி ஆலோசனை நடத்தினார். அமித்ஷா தங்கியிருந்த ஓட்டலுக்கு இரவு 11 மணிக்கு குருமூர்த்தி சென்றார். அப்போது தமிழக அரசியல் நிலவரம் குறித்தும், நடிகர் ரஜினியின் அரசியல் நிலைப்பாடு தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.


குருமூர்த்தியுடன், மத்திய அமைச்சர் அமித்ஷா சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

Similar News