புதுச்சேரி முதலமைச்சரை சந்தித்து முக்கிய கோரிக்கை வைத்த நடிகர் சந்தானம்!

புதுச்சேரியில் படப்பிடிப்பு கட்டண வரியை குறைக்க வலியுறுத்தி அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமியை நடிகர் சந்தானம் நேரில் சந்தித்து முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

Update: 2021-12-18 11:54 GMT

புதுச்சேரியில் படப்பிடிப்பு கட்டண வரியை குறைக்க வலியுறுத்தி அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமியை நடிகர் சந்தானம் நேரில் சந்தித்து முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

சினிமாத்துறையை பொறுத்தவரையில் புதுச்சேரியில் அதிகளவு படப்பிடிப்புகளை நடத்தி வருகின்றனர். சுற்றுலாத்தளங்கள் மற்றும் கடற்கரை பகுதி என ஏராளமான இடங்கள் உள்ளதால் இந்திய திரையுலகம் புதுச்சேரியில் படப்பிடிப்புகளை நடத்தி வருகிறது. இதனிடையே புதுச்சேரி மாநிலத்தில் படப்பிடிப்பு நடத்துவதற்கு அம்மாநில அரசு கூடுதலான வரி விதிப்பதாக கூறப்படுகிறது. இதனால் பலர் அம்மாநிலத்தில் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்றால் கூடுதலான பணம் செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சந்தானம் கதாநாயகனாக நடிக்கின்ற புதிய திரைப்படம் ஒன்று புதுச்சேரியில் படமாக்கப்பட உள்ளது. இதனிடையே, நடிகர் சந்தானம் புதுச்சேரி சட்டசபையில் முதலமைச்சர் ரங்கசாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார். மேலும், புதுச்சேரி மாநிலத்தில் உயர்த்தப்பட்டுள்ள படப்பிடிப்பு கட்டணத்திற்கான வரியை குறைக்கவும், சுற்றுலாத்தலங்களில் படப்பிடிப்பிற்கான அனுமதியை எளிய முறையில் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினார்.

Source, Image Courtesy: Puthiyathalamurai


Tags:    

Similar News