"கடமைகளை உணர்ந்து பொறுப்புள்ள குடிமக்களாக நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடவும்!" உறுதிமொழியுடன் புதுவை ஆளுநர் குடியரசு தின வாழ்த்து!

Update: 2022-01-26 04:54 GMT

"புதுவை மக்களுக்கும், இந்திய குடிமக்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று புதுச்சேரி கவர்னர் குடியரசு தின வாழ்த்துச் செய்தியை தொடங்கினார்.


73'வது குடியரசு தினத்தை நாடு வெகு விமர்சையாக கொண்டாடி வருகிறது. தலைவர்களும், பொதுமக்களும் குடியரசு தினத்தை வாழ்த்துக்  கூறி கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தெலுங்கானா, புதுவை  கவர்னர்  டாக்டர். தமிழிசை சவுந்தரராஜன், குடியரசு தின வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது :


இந்திய குடியரசு தினம், நாட்டின் குடிமக்கள் அனைவருக்கும் பெருமைக்குரிய நன்நாள் ஆகும். புதுவை மக்களுக்கும், இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் நாட்டின் 73-வது குடியரசு தினத்தை முன்னிட்டு எனது குடியரசு தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். நம்முடைய தேசியத் தலைவர்கள் முன்னெடுத்துக் கொடுத்த இறையாண்மை, பொதுவுடமை, மதச் சார்பின்மை, ஜனநாயகம், குடியரசு ஆகியவற்றை பேணிப்பாதுகாக்கவும், இந்திய அரசியலமைப்புச் சாசனம் வகுத்துக் கொடுத்த ஜனநாயக கடமைகளை உணர்ந்து பொறுப்புள்ள குடிமக்களாக நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடவும் இந்த நாளில் நாம் உறுதி ஏற்போம்.   

இவர் தன் வாழ்த்துச் செய்தியை பதிவு செய்துள்ளார். 

Maalaimalar


Tags:    

Similar News