புதுச்சேரியில் இனி ரேஷன் கடைகள் சூப்பர் மார்க்கெட்டுகளாக தரம் உயரும் - ஆளுநர் தமிழிசையின் அதிரடி அறிவிப்பு

Update: 2022-01-27 12:00 GMT

புதுச்சேரியில் உள்ள ரேஷன் கடைகளை சூப்பர் மார்க்கெட்டுகள் ஆக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் பொறுப்பு ஆளுநரும் ஆன தமிழிசை சௌநதரராஜன் தெரிவித்துள்ளார்.

தெலுங்கானாவில் குடியரசு தின நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் தமிழிசை சவுந்தரராஜன் பின்னர் புதுச்சேரி சென்று அங்கும் கொடியேற்றினார் பின் உரையாற்றிய அவர் கூறியதாவது, "2050'ல் உலகில் மிகப்பெரிய பொருளாதார வல்லரசு நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது" என்றார். "புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள கூட்டுறவு நியாயவிலைக் கடைகளை சூப்பர் மார்க்கெட்டுகளாக தரம் உயர்த்த தேசிய கூட்டுறவு அபிவிருத்தி கழகம் நிதியுதவி பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்


மேலும், "புதுச்சேரி விமான நிலையத்தை விரிவு படுத்துவதற்கான பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளது எனவும், ஆன்மிக சுற்றுலா, மருத்துவ சுற்றுலா, கல்வி சுற்றுலா, மற்றும் இயற்கை சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது" எனவும் தமிழிசை தெரிவித்தார்.

Source - Asianet News

Similar News