காரைக்காலில் அதிர்ச்சி: பார்வதீஸ்வரர் கோயிலில் அம்மன் சிலை சேதம்!

காரைக்காலில் உள்ள பார்வதீஸ்வர் கோயிலில் அம்மன் சிலையை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-03-03 07:03 GMT

காரைக்காலில் உள்ள பார்வதீஸ்வர் கோயிலில் அம்மன் சிலையை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

காரைக்காலில் மிகவும் பிரபலமான சுயம்வர தபஸ்வினி அம்பாள் சமேத பார்வதீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வழிபட்டு செல்கின்றனர். இந்த கோயில் திருநான சம்பந்தரால் பாடல் பெற்ற தலமும் கூட. இக்கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கடந்த மாதம் பிப்ரவரி 28ம் தேதி அம்பாள் சிலையின் கை பகுதி முற்றிலும் சேதமடைந்துள்ளது. இதனை அறிந்த கோயில் நிர்வாகம் சம்பவ இடத்தில் சென்று விசாரித்தது. இது பற்றி கேள்விப்பட்ட இந்து முன்னணி மாவட்ட தலைவர் கணேஷ் தலைமையில் புதிய பேருந்து நிலையம் அருகாமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிடவைத்தனர். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றர்.

Source: Dinamalar

Image Courtesy: Maalaimalar

Tags:    

Similar News