பிரதமரின் 'அதிவிரைவு சக்தி' திட்டத்தில் இணைந்த புதுச்சேரி மாநிலம்!

Update: 2022-05-10 05:21 GMT

பிரதமரின் 'அதிவிரைவு சக்தி' திட்டத்தில் புதுச்சேரி மாநிலம் இணைந்துள்ளது. இதனால் மாநிலத்தில் தேவையான உள்கட்டமைப்புகளை மேம்படுத்த அதிகாரமிக்க இரண்டு குழுக்களை உருவாக்க ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.

நாட்டின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கத்தில் கதி சக்தி (அதிவிரைவு) திட்டம் என்கின்ற தேசிய மாஸ்டர் பிளான் திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்தார். அதன்படி இத்திட்டமானது மிக பிரமாண்ட முறையில் 100 லட்சம் கோடி மதிப்பில் அமல்படுத்தப்படுகிறது.

இதன் மூலம் ரயில்வே, சாலைகள், பெட்ரோலியம் மற்றும் எரிவாயு, மின்சாரம், தொலைத்தொடர்பு, கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து உட்பட 16 மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளை ஒன்றிணைக்கலாம்.


Source, Image Courtesy: Dinamalar

Tags:    

Similar News