கலாச்சாரத்தை சீரழிக்கும் சொகுசு கப்பல் புதுச்சேரி வருவதற்கு அனுமதியில்லை: ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்!

Update: 2022-06-07 07:36 GMT

சொகுசு கப்பல் புதுச்சேரிக்கு வருவதற்கு அரசு எந்த ஒரு அனுமதியும் வழங்கவில்லை என்று அம்மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

கடல் சாகசப் பயணத்தை தொடங்கி வைத்த பின்னர் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேசுகையில், கடல் சாகசப் பயணத்தில் மாணவிகள் பங்கேற்பது மிகவும் சவாலான காரியம் ஆகும். எனவே இந்த சாகசத்தில் ஈடுபட்டுள்ள அவர்களுக்கு ஊக்கம் மற்றும் தன்னம்பிக்கை கிடைக்கும். பிளாஸ்டிக் பொருட்கள் பூமிக்கு மிகப்பெரிய பாரமாக உள்ளது.

சுற்றுச்சூழல் தினத்தை கொண்டாடும் வகையில், பிளாஸ்டிக் இல்லாத உலகமே வருங்கால சந்ததியினருக்கு நாம் அளிக்கின்ற ஆரோக்கியமான பரிசாக இருக்கும். மேலும், தமிழகத்தில் இருந்து புதுச்சேரி வரும் சொகுசு கப்பலுக்கு புதுச்சேரி அரசு எவ்வித அனுமதியும் வழங்கவில்லை. அது பற்றிய கோப்பும் எனக்கு வரவில்லை. புதுச்சேரி மாநிலத்தின் சுற்றுலாவை மேம்படுத்துவது அரசின் எண்ணம். அதே சமயத்தில் வருமானத்திற்காக கலாச்சாரத்தை சீரழிக்கின்ற சுற்றுலாவிற்கு அனுமதி அளிக்க முடியாது. இவ்வாறு ஆளுநர் தமிழிசை கூறினார்.

Source, Image Courtesy: Dinamalar

Tags:    

Similar News