ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழுக்கு இருக்கை.. பிரதமருக்கு குவியும் பாராட்டுக்கள்..

Update: 2023-06-27 03:35 GMT

அமெரிக்காவில் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழுக்கு இருக்கை அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து கொண்டு வருகிறது. ஏற்கனவே தேசிய அளவில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறார்கள். தற்போது உலக அளவில் முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக பிரதமர் நரேந்திர மோடியின் இந்து ஒரு செயல் அமைந்து இருக்கிறது. மேலும் தமிழ் ஆர்வம் மிகுந்த புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் இதற்கு பாராட்டி அறிவிப்பும் ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறார்.


புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அமெரிக்க சுற்றுப்பயணத்தின்போது வாஷிங்டன் நகரில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றிய பாரத பிரதமர் மோடி, மத்திய அரசின் உதவியுடன் அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழுக்கு இருக்கை அமைக்கப்படும் என்று அறிவித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. அது மட்டுமல்ல அது பிரதமரின் இந்த ஒரு அறிவிப்பு மூலமாக தமிழின் சிறப்பை உலகத்திற்கு எடுத்து கூற ஒரு வாய்ப்பு.


பிரதமரின் இந்த அறிவிப்பு தமிழ் ஆராய்ச்சியை வலுப்படுத்த மேலும் உதவும். அதற்காக, நம் பிரதமருக்கு தமிழர்களின் சார்பாக எனது மனமார்ந்த நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் பிரதமர் மோடி அவர்கள் தமிழுக்காகவும் தமிழ் மக்களுக்காகவும் இது போன்ற பல்வேறு நன்மைகளை தொடர்ந்து செய்வார் என்றும் கூறியிருக்கிறார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News