புதுச்சேரி: வாகனத்தில் கொண்டுசெல்லப்பட்ட இரண்டு கோடி ரூபாய் பறிமுதல்!

Update: 2021-03-20 01:00 GMT

புதுச்சேரியில் வரவிற்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வியாழக்கிழமை அன்று வாகனத்தில் கொண்டுசெல்லப்பட்ட இரண்டு கோடி ரூபாயைப் பறிமுதல் செய்துள்ளனர். அதே நேரத்தில் ஒரு வீட்டில் இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள பண பெட்டிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.




வியாழக்கிழமை அன்று காந்திகிராமம், தட்டன்சாவடி, இந்திரா நகர் உள்ளிட்ட தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ள பறக்கும் படையினர் தந்தை பெரியார் நகரில் வைத்து ஒரு வாகனத்தை நிறுத்து திடீரென சோதனை மேற்கொண்டனர் மற்றும் அதில் கொண்டுசெல்லப்பட்டு இரண்டு கோடி ரூபாயைப் பறிமுதல் செய்தனர்.

மேலும் இது குறித்துத் தேர்தல் அதிகாரி ஷுர்பிற் சிங் வெளியிட்ட அறிக்கையில், விசாரணையில் இந்த பணம் வங்கியில் எடுக்கப்பட்டது என்று அவர்கள் தெரிவித்தாலும், அதற்கான ஆவணத்தை அவர்களால் சமர்ப்பிக்க முடியவில்லை என்பதைத் தெரிவித்தார். எனவே சட்டமன்ற தேர்தலுக்கு வாக்காளர்களுக்குச் சட்டவிரோதமாகப் பணத்தை விநியோகிப்பதாகச் சந்தேகத்தைத் தூண்டியது என்று அவர் குறிப்பிட்டார்.




 இந்த பணம் 100, 500 மற்றும் 200 எண்ணிக்கையில் இருந்தது, மேலும் இதனை எடுத்துச் சென்ற வாகனமும் வங்கிகளால் பயன்படுத்தப்படும் தனியார் வேன் என்றும் ஷுர்பிற் சிங் குறிப்பிட்டார். மேலும் விசாரணைக்காக இந்த பணம் வருமான வரித்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

Similar News