புதுச்சேரி: 30 MLA களில் 11 பேர் மீது நிலுவையில் உள்ள குற்றவியல் வழக்குகள்!

Update: 2021-03-07 01:30 GMT

அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில்.புதுச்சேரியில் அனைத்து கட்சிகளும் பரபரப்புடன் தேர்தல் வேலைகளைச் செய்து வருகின்றது. அந்நிலையில் தற்போதிருக்கும் MLA க்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளது. புதுச்சேரியில் அமைந்திருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களில் 30 பேரில் 11 பேர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும் ஜனநாயக சீர்திருத்தச் சங்கத்தின் அறிக்கையின் படி, 4 MLA க்கள் மீது கடுமையான குற்ற வழக்குகள் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


1 MLA மீது கொலைக் குற்ற வழக்கும் மற்றும் மற்றொரு MLA ஒருவர் மீது கொலை முயற்சி தொடர்பான வழக்கையும் பதிவு செய்துள்ளது. அமர்த்திருக்கும் INC கட்சியின் 15 MLA களில் 6 பேர் மீது குற்ற வழக்கு உள்ளது. அனைத்து இந்திய NR காங்கிரஸ் MLA கள் 7 பேரில் 2 பேர் மீதும் மற்றும் AIADMK யின் 4 MLA களில் ஒருவர் மீதும் மற்றும் திமுகவின் 3 இல் 2 பேர் அனைவரும் தங்களுக்கு எதிரான பிராமண பத்திரங்களில் குற்ற வழக்கைப் பதிவு செய்துள்ளனர்.

INC யில் 15 MLA களில் 3 பேர் மீது மற்றும் அனைத்து இந்திய NR காங்கிரஸ் 7 MLA களில் ஒருவர் மீதும் கடுமையான குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 30 MLA 25 பேரில் 1 கோடிக்கும் அதிகமாகச் சொத்துக்களை அறிவித்துள்ளனர். INC யில் 13 பேர் மற்றும் NR காங்கிரஸ் 5 MLA மற்றும் AIADMK யில் 4 MLA களில் 3 பேர் மற்றும் DMK யில் IND இல் ஒருவர் என MLA மீது 1 கோடிக்கும் மேல் சொத்துக்களை அறிவித்துள்ளனர். MLA களின் சராசரி சொத்துக்கள் 9.66 கோடி உள்ளது.


கட்சி வாரியாக INC யில் 15 MLA களில் சராசரி சொத்துக்கள் 9.63 கோடி என்றும் மற்றும் NR காங்கிரஸ் 7 MLA களின் மொத்த சொத்துக்கள் 9.06 கோடி ஆராயப் பட்டுள்ளது. AIADMK வின் 4 MLA களின் சொத்துக்கள் 5.69 கோடி என்றும் மற்றும் திமுகவின் மூன்று MLA களின் சொத்துக்கள் 19.31 கோடி என்று பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. 

Similar News