தீபாவளிக்கு அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும் 10 கிலோ அரிசி: புதுச்சேரி அரசு தகவல் !

தீபாவளியை முன்னிட்டு அனைத்து ரேசன் அட்டை தாரர்களுக்கும் 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்று புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.

Update: 2021-10-26 01:46 GMT

தீபாவளியை முன்னிட்டு அனைத்து ரேசன் அட்டை தாரர்களுக்கும் 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்று புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.

புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களின் நலன் கருதி அவர்களுக்கு எண்ணற்ற நலத்திட்டங்களை அம்மாநில அரசு செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில் வருகின்ற தீபாவளியை முன்னிட்டு ஏழை, எளியோர்கள் பயன்பெறும் வகையில் அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும் 10 கிலோ இலவசமாக அரிசி மற்றும் 2 கிலோ சக்கரையும் வழங்கப்பட உள்ளது என அறிவித்துள்ளது.

Daily Thanthi

Tags:    

Similar News