உக்ரைனில் இருந்து 18 புதுவை மாணவர்கள் நாடு திரும்பினர்!

Update: 2022-03-07 05:04 GMT

உக்ரைனில் போர் சூழலில் மாட்டிக்கொண்ட மேலும் 18 புதுச்சேரி மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளனர்.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில் அங்கு தவித்து வந்த இந்தியர்களை மத்திய அரசு பத்திரமாக மீட்டு தாயகம் கொண்டு வருகிறது. அதே போன்று புதுச்சேரியை சேர்ந்த மாணவ, மாணவிகள் பலர் உக்ரைனில் படித்து வந்தனர். இந்தியர்களை மீட்பதற்காக ஆபரேசன் கங்கா என்ற திட்டத்துடன் களமிறங்கியது. அதன்படி 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர். அதே போன்று புதுச்சேரியை சேர்ந்தவர்கள் 27 பேர் உக்ரைனில் இருப்பதாக கூறப்பட்டது. அதன்படி முதற்கட்டமாக மருத்துவ மாணவி ரோஜா சிவமணி மீட்கப்பட்டார். அதனை தொடர்ந்து மற்ற மாணவர்களையும் மத்திய அரசு மீட்டு வருகிறது.

இந்நிலையில், உக்ரைனில் இருந்து நேற்று இந்தியர்களை மத்திய அரசு மீட்டு வந்தது. அதில் புதுச்சேரியை சேர்ந்த 18 மாணவ, மாணவிகள் மீட்கப்பட்டுள்ளனர். அதில் 13 பேர் டெல்லியில் இருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். மீதம் உள்ளனர். 5 பேர் புதுச்சேரி விருந்தினர் மாளிகையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். புதுவைக்கு வந்தவர்களை அவர்களின் பெற்றோர் கண்ணீர் மல்க வரவேற்றனர். அதே போன்று காரைக்கால் மாணவி சிவசங்கரியை அமைச்சர் சந்திரபிரியங்கா மற்றும் ஆட்சியர் அர்ஜூன் சர்மா மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர்.

Source, Image Courtesy: Daily Thanthi

Tags:    

Similar News