அரசு பள்ளியில் 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கை தொடங்கியது!

Update: 2022-07-21 10:46 GMT

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடங்களுக்கான 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கை தொடங்கியது. அதன்படி முதல் நாளில் 125 பேருக்கு சேர்க்கை ஆணை வழங்கப்பட்டது.

மேலும், மாணவர் கலந்தாய்வு புதுச்சேரியில் உள்ள அரசுப் பள்ளிகளில் 11ம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை பள்ளி அளவில் நடைபெற்று முடிந்துள்ளது.

இந்நிலையில், கடந்த 7ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. பள்ளிகளில் 11ம் வகுப்பு சேர்க்கைக்கு விண்ணப்பித்து இடம் கிடைக்காதர்வர்களுக்கும் இதுவரையில் எந்த பள்ளிகளிலும் சேராத மாணவ, மாணவிகளுக்கும் இறுதி வாய்ப்பாக மையப்படுத்தப்பட்ட கலந்தாய்வு நடத்தி சேர்க்கை ஆணை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி அரசுப் பள்ளிகளில் காலியாக இருந்த 1,935 இடங்களை நிரப்புவதற்கு இந்த கலந்தாய்வு நடத்தப்பட்டது.

Source, Image Courtesy: Daily Thanthi

Tags:    

Similar News