புதுச்சேரி மருத்துவமனைகளை கண்காணிக்க வல்லுனர் குழு: அ.தி.மு.க. கோரிக்கை!

Update: 2022-04-06 01:35 GMT

புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளை ஆய்வு செய்வதற்காக வல்லுனர் குழு அமைக்க வேண்டும் என்று அதிமுக செயலாளர் அன்பழகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து புதுச்சேரி மாநில கிழக்கு அதிமுக செயலாளர் அன்பழகன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது: மனித உயிர்கள் பற்றி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் செயல்பாடுகளை கண்காணிப்பது அரசுடைய கடமையாகும். புதுச்சேரியில் புற்றீசல் போன்று பல்வேறு தனியார் மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகள் உருவாகிவிட்டது. அங்கு போதுமான மருத்துவ வல்லுனர்கள் மற்றும் ஆய்வுக்கூட தொழில்நுட்ப ஊழியர்கள் இருக்கின்றனரா என்பதை பற்றிய விவரங்களை சுகாதாரத்துறை ஆய்வு செய்வதில்லை. மனித உயிர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் நோய் அறுவை சிகிச்சை செய்வதற்கு சில தனியார் மருத்துவமனைகளில் உட்கட்டமைப்பு இல்லாமலேயே அறுவை சிகிச்சை மேற்கொள்கின்றனர்.

இது போன்ற சமயங்களில் உயிர் போகும் நிலையும் உருவாகிறது. அப்படி அறுவை சிகிச்சை செய்து ஏதாவது விபரீதம் ஏற்படும்போது வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்படும்போது நோயாளிகளின் உயிர் பறிபோகிறது. எனவே இது போன்ற மருத்துவமனைகளை ஆய்வு செய்வதற்கு அரசு வல்லுனர் குழு அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Daily Thanthi

Tags:    

Similar News