புதுவை சட்டசபை காவலரை தாக்கி கொலை மிரட்டல்!

Update: 2022-05-04 10:39 GMT

புதுவை லலித் தொலாத்திரே வீதியை சேர்ந்தவர் சிவபாலன். இவரது மனைவி சரண்யா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கணவன், மனைவி பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், சிவபாலன் அவரது நண்பர் ஜெயசிங்குடன் சரண்யாவின் வீட்டுக்கு சென்று ஆபாசமான வார்த்தையில் பேசி தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதனை கேள்விப்பட்ட சரண்யாவின் உறவினரான ஓய்வு பெற்ற சட்டசபை காவலராக பணியாற்றியவர் புண்ணியமூர்த்தி 62, தட்டிகேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிவபாலன் அவரையும் தகாத வார்த்தையில் திட்டி அடித்துள்ளார். இதில் புண்ணியமூர்த்தி காயமடைந்து அலறி துடித்தார். இந்த சம்பவத்தை சரண்யா தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார். இதனால் பயந்து அங்கிருந்து சிவபாலன் ஓடிவிட்டார். இது தொடர்பாக புண்ணியமூர்த்தி பெரியகடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் தலைமறைவாக இருக்கும் சிவபாலனை தேடி வருகின்றனர்.

Source: Malaimalar

Image Courtesy: Facebook

Tags:    

Similar News