புதுவை உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. தனித்து போட்டியா?

Update: 2022-03-29 02:39 GMT

புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுவதாக முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலின்போது என்.ஆர்.காங்கிரஸ், பாஜக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அதன்படி பாஜக தலைமையிலான கட்சி வெற்றிப்பெற்று ஆட்சியைப் பிடித்தது.

இந்நிலையில், புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் வருகின்ற நிலையில் பாஜக தனித்து போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இதே போன்ற கருத்தை பாஜக மேலிட பார்வையாளரான நிர்மல்குமார் சுரானாவிடமும் வலியுறுத்தப்பட்டுள்ளது. தனியாக போட்டியிட்டால் மட்டுமே கட்சியை இன்னும் வலுப்படுத்த முடியும் என தொண்டர்கள் கூறியுள்ளனர். இதனை ஏற்றுக்கொண்ட நிர்மல்குமார் சுரானா உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவது பற்றி மேலிடத்தில் ஆலோசனை செய்து அறிவிக்கப்படும் எனக் கூறியுள்ளார்.

Source: Daily Thanthi

Image Courtesy:The New Indian Express

Tags:    

Similar News