புதுச்சேரி கடலில் மூழ்கிய விசைப்படகு!

Update: 2022-04-02 10:13 GMT

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே உள்ள எக்கியர்குப்பம் மீனவ கிராமத்தை சேர்ந்த ஜெய்கணேஷ், சிவராமன், சந்திரன் உள்ளிட்டோருக்கு சொந்தமான விசைப்படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

நேற்று (ஏப்ரல் 1) காலை எதிர்பாராத விதமாக அந்த விசைப்படகுகள் கடலில் மூழ்கியது. கடல் சீற்றம் அதிகமாக இருந்ததால் கடற்கரையில் இருந்து படகுகள் இழுத்துச் செல்லப்பட்டு கடலில் மூழ்கியதா? அல்லது வேறு யாரேனும் தொழில் போட்டியின் காரணமாக படகில் ஓட்டை போட்டு தண்ணீர் செல்வதற்கு வழி செய்தனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source, Image Courtesy: Daily Thanthi

Tags:    

Similar News