தமிழ்ச்சங்க தலைவர் முத்துவுக்கு முதலமைச்சர் ரங்கசாமி நேரில் வாழ்த்து!

Update: 2022-05-07 12:55 GMT

புதுச்சேரி தமிழ்ச்சங்க தலைவர் வி.முத்து பவள விழாவானது திருவண்ணாமலை மாவட்டம், தெள்ளார் ராஜா நந்திவர்மன் கல்லூரியில் நடைபெற்றது. இந்த விழாவில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு, வி.முத்து கிருட்டிணவேணி தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து, விழா மலரை வெளியிட்டார். அந்த மலரை அனைத்திந்திய தமிழ்ச்சங்க பேரவை பொதுச்செயலாளர் முகுந்தன், மத்திய அதிவிரைவு படை உயர் அதிகாரி எரிக் கில்பர்ட் ஜோஸ் உள்ளிட்டோர் பெற்றுக்கொண்டனர்.

மேலும், பவள விழா மலரினை வி.ஐ.டி. வேந்தர் விசுவநாதன் வெளியிட சபாநாயகர் செல்வம், வெற்றி அழகன் எம்.எல்.ஏ., மணக்குள விநாயகர் கல்வி குழுமத்தின் நிர்வாக இயக்குனர் தனசேகரன் உள்ளிட்டோர் பெற்றுக்கொண்டனர்.

மேலும், மயிலம் பொம்மபுர ஆதீனம் 20ம் பட்டம் ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள், தொண்டை மண்டலம் ஆதினம், வடலூர் ஊரன் அடிகளால் சச்சிதானந்த சுவாமிகள் ஆசி வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Daily Thanthi

Tags:    

Similar News