அப்பா பைத்தியசாமி கோயிலில் குருபூஜை: முதலமைச்சர் ரங்கசாமி அன்னதானம் வழங்கினார்!

அப்பா பைத்தியசாமி கோயிலில் குருபூஜையை முன்னிட்டு முதலமைச்சர் ரங்கசாமி அன்னதானம் வழங்கினார். புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி மிகவும் தெய்வ பக்தி உடையவர். இவரின் ஆன்மீக குருவாக அப்பா பைத்தியசாமிகள் ஆவார். அவரது கோயிலில் வழிப்படுவதை வழக்கமாக கொண்டிருப்பார்.

Update: 2022-02-08 04:49 GMT

அப்பா பைத்தியசாமி கோயிலில் குருபூஜையை முன்னிட்டு முதலமைச்சர் ரங்கசாமி அன்னதானம் வழங்கினார். புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி மிகவும் தெய்வ பக்தி உடையவர். இவரின் ஆன்மீக குருவாக அப்பா பைத்தியசாமிகள் ஆவார். அவரது கோயிலில் வழிப்படுவதை வழக்கமாக கொண்டிருப்பார்.

இந்நிலையில், கோரிமேட்டில் உள்ள குரு அப்பா பைத்தியசாமி கோயிலில் நேற்று (ஜனவரி 07) குருபூஜை விழா நடைபெற்றது. அப்போது திருவிளக்கு வழிபாடு, புனிதநீர் வழிபாடு நடைபெற்றது. அதன்படி காலை 10 மணிக்கு அப்பா பைத்தியசாமிக்கு திருமஞ்சனம் மற்றும் திருக்குட நன்னீராட்டு விழா நடந்தது.

இந்த விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். இதில் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதே போன்று விழாவுக்கு வந்திருந்த அனைவருக்கும் முதலமைச்சர் ரங்கசாமி அன்னதானம் வழங்கினார்.

Source, Image Courtesy: Daily Thanthi

Tags:    

Similar News