ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுடன் முதலமைச்சர் ரங்கசாமி திடீர் சந்திப்பு!

ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி நேற்று திடீரென்று சந்தித்து பேசியது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Update: 2021-09-29 05:02 GMT

ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி நேற்று திடீரென்று சந்தித்து பேசியது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.

புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் 3 கட்டங்களாக நடத்தப்பட இருப்பதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி முதற்கட்ட தேர்தல் அக்டோபர் 21ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதற்கான வேட்புமனு தாக்கல் நாளை (செப்டம்பர் 30) வேட்புமனு தாக்கல் தொடங்க உள்ளது.

இந்நிலையில், முதலமைச்சர் ரங்கசாமி ஆளுநர் தமிழிசை சவுந்தர ராஜனை நேற்று திடீரென்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பானது சிறிது நேரம் மட்டும் நடந்ததாக கூறப்படுகிறது. அப்போது உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

அதனை தொடர்ந்து முதலமைச்சர் ரங்கசாமி ஆளுநர் மாளிகையை விட்டு வெளியே வந்துள்ளார். அப்போது அங்கிருந்த பத்திரிகையாளர்களை சந்தப்பதை தவிர்த்து காரில் ஏறி புறப்பட்டு சென்றுள்ளார்.

Source, Image Courtesy: Daily Thanthi


Tags:    

Similar News