தி.மு.க படுதோல்வி அடையும் - அடித்துச்சொல்லும் வேலூர் இப்ராஹீம்

தி.மு.க விரைவில் படுதோல்வி அடையும் என்று பா.ஜ.க மாநில சிறுபான்மை பிரிவு தலைவர் வேலூர் இப்ராஹிம் பேசினார்.

Update: 2022-10-06 02:55 GMT

வரும் லோக்சபா தேர்தலில் தி.மு.க படுதோல்வியையும் அடையும் என்று பா.ஜ.க சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் வேலூர் இப்ராஹிம் பேசினார். வால்பாறை பா.ஜ.க மண்டல மாநிலத்தில் அலுவலகத்தில் தலைவர் பாலாஜி தலைமையில் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. மண்டல பார்வையாளர் தங்கவேல், மண்டல செயலாளர் செந்தில் முருகன், சுனில் ஆகியோர் கலந்து கொண்டார்கள். இதில் பா.ஜ.க சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் வேலூர் இப்ராஹிம் பேசும் பொழுதும் சட்டசபை தேர்தலில் வால்பாறையில் அதிமுக வெற்றி பெற்றது.


இதனால் தி.மு.க அரசு வால்பாறை மக்களை தொடர்ந்து வஞ்சிக்கிறது. இங்குள்ள அரசு மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாததால் நோயாளிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் வால்பாறையில் அடிப்படை வசதிகள் கூட இல்லை.


மக்களை பழிவாங்கும் தி.மு.க அரசை கண்டித்து பா.ஜ.க விரைவில் போராட்டம் நடத்துவோம் என்று கூறியிருக்கிறார். மேலும் உள்ளாட்சி தேர்தலில் பணம் கொடுத்து தி.மு.க வெற்றி பெற்றது வரும் லோக்சபா தேர்தலில் படுதோல்வியை சந்திக்கும் லோக்சபா தேர்தலின் போது மத்திய அரசின் சாதனைகளை ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பா.ஜ.க நிர்வாகம் எடுத்துரைக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Input & Image courtesy: Dinamalar News

Tags:    

Similar News