புதுச்சேரியில் மழை எதிரொலி: 2 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

தற்போது ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்து வருகிறது.

Update: 2021-11-29 04:43 GMT

தற்போது ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், தேனி, திண்டுக்கல், சேலம், தென்காசி, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அதே போன்று புதுச்சேரி, காரைக்காலில் பெய்து வரும் கனமழையால் இன்று, நாளையும் (29, 30ம் தேதி) பள்ளிகள், மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Source: Maalaimalar

Image Courtesy: News Today


Tags:    

Similar News